ரயில் மோதி உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட ஐ.டி ஊழியர், தற்கொலை செய்து கொண்டாரா ? அல்லது தவறி விழுந்தாரா? என்பது குறித்து ரயில்வே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: கோவை ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் ஐ.டி ஊழியர் உடல் மீட்கப்பட்டுள்ளது.
தென்காசியை சேர்ந்த ஆஸ்டின் என்ற வாலிபர் கோவையில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில், கோவை ரயில் நிலையம் அருகே ஆஸ்டின் உடல் சிதறிய நிலையில் கிடந்துள்ளது.

தகவலறிந்து வந்த ரயில்வே போலீசார் ஆஸ்டின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும், அவரிடமிருந்த பர்ஸ் மற்றும் செல்போன் மூலம் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, ஆஸ்டின் உயிரிழப்பு குறித்து அவரது பெற்றோர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
ரயில் மோதி உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட ஆஸ்டின், தற்கொலை செய்து கொண்டாரா ? அல்லது தவறி விழுந்தாரா? என்பது குறித்து ரயில்வே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தென்காசியை சேர்ந்த ஆஸ்டின் என்ற வாலிபர் கோவையில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்நிலையில், கோவை ரயில் நிலையம் அருகே ஆஸ்டின் உடல் சிதறிய நிலையில் கிடந்துள்ளது.
தகவலறிந்து வந்த ரயில்வே போலீசார் ஆஸ்டின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும், அவரிடமிருந்த பர்ஸ் மற்றும் செல்போன் மூலம் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, ஆஸ்டின் உயிரிழப்பு குறித்து அவரது பெற்றோர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.
ரயில் மோதி உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட ஆஸ்டின், தற்கொலை செய்து கொண்டாரா ? அல்லது தவறி விழுந்தாரா? என்பது குறித்து ரயில்வே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.