மாநகராட்சி முக்கிய நீர் ஆதாரமாக உள்ள பில்லூர் அணையில் கோவை மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து நீரேற்று பகுதிக்கு சென்று நீரேற்று மையத்தை பார்வையிட்டர்.
கோவை: கோவை பில்லூர் அணையில் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அண்மையில் பெய்த தென்மேற்கு பருவ மழையின் போது, பில்லூர் அணை முழு கொள்ளளவை எட்டி, உபரி நீர் வெளியேற்றப்பட்டது. மேலும், பில்லூர் அணை நீர் மாநகராட்சி பகுதியில் முக்கிய குடிநீர் ஆதாரம் என்பதால், போதிய மழை பொழிவு மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கோவை மாநகராட்சி முக்கிய நீர் ஆதாரமாக உள்ள பில்லூர் அணையில் கோவை மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதனை தொடர்ந்து நீரேற்று பகுதிக்குச் சென்று நீரேற்று மையத்தை பார்வையிட்டர்.

அங்கு மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து கேட்டறிந்தார். பிறகு பில்லூர் வாட்டர் போர்டு, பம்பிங் மையத்திலும் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது நீரேற்று மையத்திலிருந்து பம்பிங் மையத்திற்கு அனுப்பப்படும் நீரின் அளவு, மற்றும் சுத்திகரிப்பு மற்றும் பம்பிங் மையத்தில் இருந்து வெளியேறும் நீரின் அளவு, குடிநீர் தரம் உள்ளிட்டவை குறித்து ஆணையாளர் பிரதாப் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின் போது மாநகரப் பொறியாளர் (பொ) எஸ்.அரசு, செயற்பொறியாளர், முருகேசன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர், ஜான்சன், மாநகராட்சி உதவி செயற்பொறியாளர், பாலமுருகன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி பொறியாளர் சித்ரா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் நேரில் சென்றனர்.
அண்மையில் பெய்த தென்மேற்கு பருவ மழையின் போது, பில்லூர் அணை முழு கொள்ளளவை எட்டி, உபரி நீர் வெளியேற்றப்பட்டது. மேலும், பில்லூர் அணை நீர் மாநகராட்சி பகுதியில் முக்கிய குடிநீர் ஆதாரம் என்பதால், போதிய மழை பொழிவு மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கோவை மாநகராட்சி முக்கிய நீர் ஆதாரமாக உள்ள பில்லூர் அணையில் கோவை மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதனை தொடர்ந்து நீரேற்று பகுதிக்குச் சென்று நீரேற்று மையத்தை பார்வையிட்டர்.
அங்கு மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து கேட்டறிந்தார். பிறகு பில்லூர் வாட்டர் போர்டு, பம்பிங் மையத்திலும் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது நீரேற்று மையத்திலிருந்து பம்பிங் மையத்திற்கு அனுப்பப்படும் நீரின் அளவு, மற்றும் சுத்திகரிப்பு மற்றும் பம்பிங் மையத்தில் இருந்து வெளியேறும் நீரின் அளவு, குடிநீர் தரம் உள்ளிட்டவை குறித்து ஆணையாளர் பிரதாப் கேட்டறிந்தார்.
இந்த ஆய்வின் போது மாநகரப் பொறியாளர் (பொ) எஸ்.அரசு, செயற்பொறியாளர், முருகேசன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர், ஜான்சன், மாநகராட்சி உதவி செயற்பொறியாளர், பாலமுருகன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி பொறியாளர் சித்ரா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் நேரில் சென்றனர்.