சம்பவம் தொடர்பாக மூதாட்டி கொடுத்த புகாரின் பேரில், பொள்ளாச்சி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய பெண்ணை தேடி வருகின்றனர்.
கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் ஊத்துக்குளியில் மூதாட்டிக்கு மயக்க மருந்து கொடுத்து நகை திருடிய சம்பவம் தொடர்பாக பொள்ளாச்சி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய பெண்ணை தேடி வருகின்றனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் ஊத்துக்குளி போஸ்டல் வீதியைச் சேர்ந்தவர் 60 வயதான மூதாட்டி முத்துலட்சுமி. இவர் பூ விற்கும் தொழில் செய்து வருகிறார். கடந்த 10 நாட்களாக இவருக்கு பூ கட்டுவதற்கு உதவியாக ஒரு பெண் பணியாற்றி வந்துள்ளார். நேற்று காலையில் வழக்கம் போல அந்த பெண் மூதாட்டி வீட்டிற்கு சென்று பணி செய்து வந்தார்.
அப்போது மூதாட்டி அந்த பெண்ணிடம் தண்ணீர் கேட்டுள்ளார். ஆனால், அந்த பெண் தண்ணீருக்கு பதிலாக ஜூஸ் கொடுத்துள்ளார். சிறிது நேரத்தில் மூதாட்டி மயக்கம் அடைந்த நிலையில், அவரிடம் இருந்து தங்க மோதிரம், கம்மல், செயின் உள்ளிட்ட மூன்று பவுன் நகைகளை எடுத்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டார்.
மூதாட்டி மயங்கி நிலையில் கிடந்ததை கண்ட அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும், சம்பவம் தொடர்பாக மூதாட்டி கொடுத்த புகாரின் பேரில், பொள்ளாச்சி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய பெண்ணை தேடி வருகின்றனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் ஊத்துக்குளி போஸ்டல் வீதியைச் சேர்ந்தவர் 60 வயதான மூதாட்டி முத்துலட்சுமி. இவர் பூ விற்கும் தொழில் செய்து வருகிறார். கடந்த 10 நாட்களாக இவருக்கு பூ கட்டுவதற்கு உதவியாக ஒரு பெண் பணியாற்றி வந்துள்ளார். நேற்று காலையில் வழக்கம் போல அந்த பெண் மூதாட்டி வீட்டிற்கு சென்று பணி செய்து வந்தார்.
அப்போது மூதாட்டி அந்த பெண்ணிடம் தண்ணீர் கேட்டுள்ளார். ஆனால், அந்த பெண் தண்ணீருக்கு பதிலாக ஜூஸ் கொடுத்துள்ளார். சிறிது நேரத்தில் மூதாட்டி மயக்கம் அடைந்த நிலையில், அவரிடம் இருந்து தங்க மோதிரம், கம்மல், செயின் உள்ளிட்ட மூன்று பவுன் நகைகளை எடுத்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டார்.
மூதாட்டி மயங்கி நிலையில் கிடந்ததை கண்ட அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும், சம்பவம் தொடர்பாக மூதாட்டி கொடுத்த புகாரின் பேரில், பொள்ளாச்சி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய பெண்ணை தேடி வருகின்றனர்.