கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு பகுதிகளில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து புகையிலைப் பொருட்கள் மற்றும் ரொக்கப்பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.
Coimbatore: கோவை: கோவை மாநகரப் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையைத் தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனைகளில் வெவ்வேறு இடங்களில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உக்கடம் பகுதி என்.எச். சாலையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை சட்டவிரோதமாக விற்பனைக்காக வைத்திருந்ததாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நரேஷ்குமார் (50) மற்றும் ஹீராலால் (45) ஆகியோரை உக்கடம் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து கூல் லிப், ஹான்ஸ், மிராஜ், வி1 உள்ளிட்ட பல்வேறு வகையான புகையிலைப் பொருட்கள் மற்றும் ரூ.4,200 ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல், சாய்பாபா காலனி வெங்கடாபுரம் என்.எஸ்.ஆர். சாலையில் உள்ள ஒரு புத்தகக் கடையில் சோதனை நடத்திய போலீசார், தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் கணேஷ் குட்கா பாக்கெட்டுகளை விற்பனைக்காக வைத்திருந்ததாக புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மகாலிங்கம் (25) என்பவரை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
மேலும், சிங்காநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இருகூர் சுங்கம் மைதானம் அருகே ஆவணி பேக்கரி பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் போலீசார் மேற்கொண்ட சோதனையில், 44 பாக்கெட் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்ததாக சுதாகரன் (25) என்பவர் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை மற்றும் விநியோக வலையமைப்பு குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உக்கடம் பகுதி என்.எச். சாலையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை சட்டவிரோதமாக விற்பனைக்காக வைத்திருந்ததாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நரேஷ்குமார் (50) மற்றும் ஹீராலால் (45) ஆகியோரை உக்கடம் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து கூல் லிப், ஹான்ஸ், மிராஜ், வி1 உள்ளிட்ட பல்வேறு வகையான புகையிலைப் பொருட்கள் மற்றும் ரூ.4,200 ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல், சாய்பாபா காலனி வெங்கடாபுரம் என்.எஸ்.ஆர். சாலையில் உள்ள ஒரு புத்தகக் கடையில் சோதனை நடத்திய போலீசார், தடை செய்யப்பட்ட ஹான்ஸ் மற்றும் கணேஷ் குட்கா பாக்கெட்டுகளை விற்பனைக்காக வைத்திருந்ததாக புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மகாலிங்கம் (25) என்பவரை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
மேலும், சிங்காநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இருகூர் சுங்கம் மைதானம் அருகே ஆவணி பேக்கரி பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் போலீசார் மேற்கொண்ட சோதனையில், 44 பாக்கெட் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்ததாக சுதாகரன் (25) என்பவர் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை மற்றும் விநியோக வலையமைப்பு குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.