கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்தார். விளையாட்டு உபகரணங்கள் வழங்க வேண்டும் என வீரர்கள் கோரிக்கை விடுத்தனர். நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: தமிழ்நாடு பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பல்வேறு ஆய்வுப் பணிகளில் பங்கேற்பதற்காக இன்று காலை விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். அமைச்சர் நேரு உள்விளையாட்டு அரங்கம், விளையாட்டு மேம்பாட்டு கலந்துரையாடல் மற்றும் நெடுஞ்சாலைத் துறை விரிவாக்கப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டார்.



கோவை நேரு உள்விளையாட்டு அரங்க வளாகத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, அங்கு பயிற்சியில் ஈடுபட்டிருந்த கபடி வீரர் மற்றும் வீராங்கனைகளை நேரில் சந்தித்து அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்தார். விளையாட்டு வீரர்கள் அமைச்சரிடம், தங்களுக்கு தேவையான டி-ஷர்ட்கள், காலணிகள் உள்ளிட்ட அடிப்படை விளையாட்டு உபகரணங்களை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அமைச்சர் விளையாட்டு வீரர்களின் கோரிக்கைகளை உன்னிப்பாக கேட்டு குறிப்பெடுத்துக் கொண்டார்.



இதனைத் தொடர்ந்து, கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெறும் விளையாட்டு மேம்பாடு தொடர்பான கலந்துரையாடல் கூட்டத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பங்கேற்றார். கலந்துரையாடலில் விளையாட்டு வசதிகளை மேம்படுத்துவது குறித்து விரிவான ஆலோசனை நடைபெற்றது.



பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்ற அமைச்சர், நெடுஞ்சாலைத் துறை விரிவாக்கப் பணிகள் குறித்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி ஆய்வுக் கூட்டம் மேற்கொண்டார். நெடுஞ்சாலை திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால விரிவாக்கப் பணிகள் குறித்து விரிவான விவாதம் நடைபெற்றது.

இன்று மாலை கோவையில் நடைபெறும் அகில இந்திய அளவிலான கூடைப்பந்தாட்டப் போட்டியில், விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...

கோவை மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 90% முடிவு; விடுபட்ட வீடுகளுக்கு ICCC உதவி எண்கள் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 முதற்கட்ட வீட்டுக் கணக்கெடுப்பு பணிகள் 90% நிறைவு. விடுபட்ட வீட...

அமராவதி அணை நீர்மட்டம் 57.52 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணை 33.79 அடியாக பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் 57.52 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 33.79...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது....

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...