கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்தார். விளையாட்டு உபகரணங்கள் வழங்க வேண்டும் என வீரர்கள் கோரிக்கை விடுத்தனர். நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: தமிழ்நாடு பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பல்வேறு ஆய்வுப் பணிகளில் பங்கேற்பதற்காக இன்று காலை விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். அமைச்சர் நேரு உள்விளையாட்டு அரங்கம், விளையாட்டு மேம்பாட்டு கலந்துரையாடல் மற்றும் நெடுஞ்சாலைத் துறை விரிவாக்கப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டார்.



கோவை நேரு உள்விளையாட்டு அரங்க வளாகத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, அங்கு பயிற்சியில் ஈடுபட்டிருந்த கபடி வீரர் மற்றும் வீராங்கனைகளை நேரில் சந்தித்து அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்தார். விளையாட்டு வீரர்கள் அமைச்சரிடம், தங்களுக்கு தேவையான டி-ஷர்ட்கள், காலணிகள் உள்ளிட்ட அடிப்படை விளையாட்டு உபகரணங்களை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அமைச்சர் விளையாட்டு வீரர்களின் கோரிக்கைகளை உன்னிப்பாக கேட்டு குறிப்பெடுத்துக் கொண்டார்.



இதனைத் தொடர்ந்து, கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெறும் விளையாட்டு மேம்பாடு தொடர்பான கலந்துரையாடல் கூட்டத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பங்கேற்றார். கலந்துரையாடலில் விளையாட்டு வசதிகளை மேம்படுத்துவது குறித்து விரிவான ஆலோசனை நடைபெற்றது.



பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்ற அமைச்சர், நெடுஞ்சாலைத் துறை விரிவாக்கப் பணிகள் குறித்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி ஆய்வுக் கூட்டம் மேற்கொண்டார். நெடுஞ்சாலை திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால விரிவாக்கப் பணிகள் குறித்து விரிவான விவாதம் நடைபெற்றது.

இன்று மாலை கோவையில் நடைபெறும் அகில இந்திய அளவிலான கூடைப்பந்தாட்டப் போட்டியில், விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...