நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணைக்கு ராகுல் காந்தியை அமலாக்கத்துறை ஆஜராக கூறியதை கண்டித்தும், பொய் வழக்கு போடுவதாகவும் கூறி, அதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கை விவகாரத்தில் ராகுல் காந்தி மீது பொய் வழக்கு போடுவதாக கூறி கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.

நேருவால்தொடங்கப்பட்ட நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கைக்கு வழங்கப்பட்ட கடனில் முறைகேடுகள் நடந்ததாக கூறி சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை தற்பொழுது அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.
இந்நிலையில், அவ்வப்போது ராகுல் காந்தியிடமும் சோனியா காந்தியிடமும் அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், காங்கிரஸ் கட்சியினர் நாடாளுமன்றத்திலும் நாடாளுமன்றத்திற்கு வெளியிலும் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், விசாரணைக்கு ராகுல் காந்தியை அமலாக்கத்துறை ஆஜராக கூறுவதை கண்டித்தும் ராகுல் காந்தி மீது பொய் வழக்குப் போடுவதாகவும் கூறி அதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் சிவானந்தா காலனியில் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்ட செயலாளர் கருப்புசாமி தலைமையில் நடைபெறும் இந்த போராட்டத்தில் கோவை மாவட்ட மகளிர் அணியினர் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண்டன பதாகைகளை ஏந்தி கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

நேருவால்தொடங்கப்பட்ட நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கைக்கு வழங்கப்பட்ட கடனில் முறைகேடுகள் நடந்ததாக கூறி சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை தற்பொழுது அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.
இந்நிலையில், அவ்வப்போது ராகுல் காந்தியிடமும் சோனியா காந்தியிடமும் அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், காங்கிரஸ் கட்சியினர் நாடாளுமன்றத்திலும் நாடாளுமன்றத்திற்கு வெளியிலும் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், விசாரணைக்கு ராகுல் காந்தியை அமலாக்கத்துறை ஆஜராக கூறுவதை கண்டித்தும் ராகுல் காந்தி மீது பொய் வழக்குப் போடுவதாகவும் கூறி அதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் சிவானந்தா காலனியில் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்ட செயலாளர் கருப்புசாமி தலைமையில் நடைபெறும் இந்த போராட்டத்தில் கோவை மாவட்ட மகளிர் அணியினர் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண்டன பதாகைகளை ஏந்தி கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.