கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் சிவானந்தா காலனியில் உண்ணாவிரதப் போராட்டம் ..!

நேஷனல் ஹெரால்டு வழக்கு விசாரணைக்கு ராகுல் காந்தியை அமலாக்கத்துறை ஆஜராக கூறியதை கண்டித்தும், பொய் வழக்கு போடுவதாகவும் கூறி, அதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.


கோவை: நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கை விவகாரத்தில் ராகுல் காந்தி மீது பொய் வழக்கு போடுவதாக கூறி கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.



நேருவால்தொடங்கப்பட்ட நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கைக்கு வழங்கப்பட்ட கடனில் முறைகேடுகள் நடந்ததாக கூறி சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை தற்பொழுது அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.

இந்நிலையில், அவ்வப்போது ராகுல் காந்தியிடமும் சோனியா காந்தியிடமும் அமலாக்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், காங்கிரஸ் கட்சியினர் நாடாளுமன்றத்திலும் நாடாளுமன்றத்திற்கு வெளியிலும் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.



இந்நிலையில், விசாரணைக்கு ராகுல் காந்தியை அமலாக்கத்துறை ஆஜராக கூறுவதை கண்டித்தும் ராகுல் காந்தி மீது பொய் வழக்குப் போடுவதாகவும் கூறி அதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் சிவானந்தா காலனியில் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை மாவட்ட செயலாளர் கருப்புசாமி தலைமையில் நடைபெறும் இந்த போராட்டத்தில் கோவை மாவட்ட மகளிர் அணியினர் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண்டன பதாகைகளை ஏந்தி கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...