கொடிசியாவில் உள்ள D அரங்கில் நடைபெறும் இந்நிகழ்ச்சிக்கு கோவை மாவட்டத்திலிருந்து சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவ-மாணவிகள், கல்லூரி மாணவ-மாணவிகள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
கோவை: சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள நிலையில் ஒலிம்பிக் ஜோதியானது கோவைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
ரேஸ்கோர்ஸ் பகுதியில் இருந்து கொடிசியா அரங்கு வரை ஒலிம்பிக் ஜோதி கொண்டுவரப்படுகின்ற நிலையில், வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில், கொடிசியா அரங்கில் ஜோதியினை அமைச்சர்கள் செஸ் கிராண்ட் மாஸ்டர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இந்நிலையில், ஒலிம்பியாட் ஜோதி கொடிசியா அரங்கிற்கு கொண்டுவரப்பட்ட நிலையில் அதற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கொடிசியா அரங்கில் மயிலாட்டம், ஒயிலாட்டம், குச்சுப்புடி ஆகிய கலை நிகழ்ச்சிகளோடு வரவேற்பு அளிக்கப்பட்டது.
கொடிசியாவில் உள்ள D அரங்கில் நடைபெறும் இந்நிகழ்ச்சிக்கு கோவை மாவட்டத்திலிருந்து சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவ-மாணவிகள் கல்லூரி மாணவ-மாணவிகள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.