நான்கு நாட்களாக சிகிச்சை பெற்று வந்த பொள்ளாச்சி திமுக நகர துணைச் செயலாளர் கார்த்திகேயன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விபத்து தொடர்பாக பொள்ளாச்சி மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: பொள்ளாச்சி அருகே வாகன விபத்தில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக நகர துணைச் செயலாளர் உயிரிழந்தார்.
பொள்ளாச்சி கோட்டாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன்(53). இவர் பொள்ளாச்சி திமுக நகர துணைச் செயலாளராக இருந்தார். கடந்த 18-ம் தேதி மாலை வேலை காரணமாக பொள்ளாச்சியிலிருந்து மீன்கரை சாலை சீனிவாசபுரம் அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்தது விபத்து ஏற்பட்டது.
இதில், பலத்த காயமடைந்த கார்த்திகேயனை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். நான்கு நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில், விபத்து தொடர்பாக பொள்ளாச்சி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பொள்ளாச்சி கோட்டாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன்(53). இவர் பொள்ளாச்சி திமுக நகர துணைச் செயலாளராக இருந்தார். கடந்த 18-ம் தேதி மாலை வேலை காரணமாக பொள்ளாச்சியிலிருந்து மீன்கரை சாலை சீனிவாசபுரம் அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக வாகனம் நிலை தடுமாறி கீழே விழுந்தது விபத்து ஏற்பட்டது.
இதில், பலத்த காயமடைந்த கார்த்திகேயனை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். நான்கு நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில், விபத்து தொடர்பாக பொள்ளாச்சி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.