காவல் துறையினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சேதமடைந்த குடிநீர் குழாய்களை சீரமைக்க துறை அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுத்து, குடிநீர் விநியோகம் செய்யப்படும் என உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
கோவை: கோவை பொள்ளாச்சி அருகே குடிநீர் விநியோகம் தடைப்பட்டதால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சி அருகே உள்ள அங்கலக்குறிச்சி பகுதியில் சாலை விரிவாக்க பணிக்காக நெடுஞ்சாலைத்துறை சார்பில், ரோட்டில் குழிகள் தோண்டப்பட்டு, இதில், குழாய்கள் சேதமடைந்ததாக தெரிகிறது.
இதனால், அங்கலக்குறிச்சி கிராமத்தில் கடந்த 10-நாட்களாக குடிநீர் வினியோகம் தடைப்பட்டு உள்ளதாக கூறி, அப்பகுதி மக்கள் பொள்ளாச்சி ஆழியாறு ரோடு நான்கு முக்கு சுங்கம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து அங்கு சென்ற ஆழியாறு காவல் துறையினர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, சேதமடைந்த குடிநீர் குழாய்களை சீரமைக்க துறை அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுத்து, குடிநீர் விநியோகம் செய்யப்படும் என உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. சாலை மறியல் போராட்டம் காரணமாக அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பொள்ளாச்சி அருகே உள்ள அங்கலக்குறிச்சி பகுதியில் சாலை விரிவாக்க பணிக்காக நெடுஞ்சாலைத்துறை சார்பில், ரோட்டில் குழிகள் தோண்டப்பட்டு, இதில், குழாய்கள் சேதமடைந்ததாக தெரிகிறது.
இதனால், அங்கலக்குறிச்சி கிராமத்தில் கடந்த 10-நாட்களாக குடிநீர் வினியோகம் தடைப்பட்டு உள்ளதாக கூறி, அப்பகுதி மக்கள் பொள்ளாச்சி ஆழியாறு ரோடு நான்கு முக்கு சுங்கம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து அங்கு சென்ற ஆழியாறு காவல் துறையினர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, சேதமடைந்த குடிநீர் குழாய்களை சீரமைக்க துறை அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுத்து, குடிநீர் விநியோகம் செய்யப்படும் என உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. சாலை மறியல் போராட்டம் காரணமாக அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.