திருமண அனுமதி பெற இனி “திருமணமாகாதவர்” என்ற சான்றிதழ் போதும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு..!

கோயில்களில் நடத்தப்படும் திருமணங்களுக்கு, இ-சேவை மையம் வாயிலாக அனுமதி வழங்கப்படும். திருமணமாகாதவர் என்ற சான்றை சமர்ப்பித்தால் போதும்' என, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.


கோவை: கோவில்களில் திருமணம் செய்ய திருமணம் ஆகாதவர் சான்று மட்டும் போதும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

கோயில்களில் நடத்தப்படும் திருமணங்களுக்கு, இ-சேவை மையம் வாயிலாக அனுமதி வழங்கப்படும். திருமணமாகாதவர் என்ற சான்றை சமர்ப்பித்தால் போதும்' என, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரது அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் நடத்தப்படும் திருமணங்களுக்கு அனுமதி பெற, இதுவரை, இதர சான்றிதழ்களுடன், முதல் திருமண சான்றும் கோரப்பட்டு வந்தது.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, முதல் திருமண சான்றுக்கு பதிலாக, இ-சேவை மையங்கள் வாயிலாக வழங்கப்படும், 'திருமணமாகாதவர்' என்ற சான்றை பெற்றுக் கொள்ள அறிவுறுத்தி உள்ளது. எனவே, இனி வரும் காலங்களில், கோவில்களில் திருமணம் நடத்திட விரும்புபவர்கள், 'திருமணமாகாதவர்' என்ற சான்றை இ-சேவை மையங்கள் வாயிலாக பெற்று, சம்பந்தப்பட்ட கோவில்களில் சமர்ப்பித்தால் போதும்.

இதுகுறித்து, கோயில் அலுவலர்களுக்கும் உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. உரிய சான்றிதழை தவிர, இதர சான்றிதழ்களை கோரினால், அறநிலையத் துறை தலைமை அலுவலகத்திற்கு, 044-28339999 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.

இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...