மாவட்டத்தில் தொடரும் மழையால், பெரிய அளவில் பாதிப்பு ஏதும் இல்லை. 6 தாலுகாக்களில், 42 மண்டல குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். பாதிப்பு இருந்தால் வருவாய் துறையை அணுகி, நிவாரண முகாமில் தங்கலாம் என மாவட்ட ஆட்சியர் அம்ரித் தெரிவித்துள்ளார்.
நீலகிரி: நீலகிரியில் காற்றின் வேகம் அதிகரித்து இரவில் கனமழை தொடர்வதால், பல இடங்களில் மரம் விழுந்து போக்குவரத்து பாதித்தது.
நீலகிரியில் நேற்று காலை, 8:30 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக அவலாஞ்சியில் 13.3 செ.மீ., அப்பர்பவானியில் 7.1 செ.மீ., மழை பதிவானது. ஊட்டி நகர் பகுதிகளில் காற்றின் வேகம் குறைவாக இருந்தாலும், புறநகர் பகுதிகளில் அதிகரித்திருந்தது.
அப்பர்பவானி - மஞ்சூர் இடையே கோரகுந்தாவில் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதித்தது. நெடுஞ்சாலைத் துறையினர் மரத்தை அகற்றினர். அப்பர்பவானி, அவலாஞ்சி சுற்றுப்புற நீர்ப்பிடிப்பு பகுதிகளில், ஆறு மாதங்களுக்குப் பின், தண்ணீர் அதிகரித்து வருகிறது.
பந்தலூர் பகுதியில் மேக மூட்டத்தால் வாகனங்களை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. பொன்னானி, சோலாடி ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. குன்னூர் பேரக்ஸ் செல்லும் சாலையில், பந்துமை அருகே, ராட்சத கற்பூர மரத்தின் கிளை சாலையில் விழுந்தது.
அவ்வழியாக வந்த இளைஞர்கள், நெடுஞ்சாலை துறையினர் மரத்தை அகற்றினர். மாவட்ட ஆட்சியர் அம்ரித் கூறுகையில், "மாவட்டத்தில் தொடரும் மழையால், பெரிய அளவில் பாதிப்பு ஏதும் இல்லை. 6 தாலுகாக்களில், 42 மண்டல குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். பாதிப்பு இருந்தால் வருவாய் துறையை அணுகி, நிவாரண முகாமில் தங்கலாம்," என்றார்.
நீலகிரியில் நேற்று காலை, 8:30 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக அவலாஞ்சியில் 13.3 செ.மீ., அப்பர்பவானியில் 7.1 செ.மீ., மழை பதிவானது. ஊட்டி நகர் பகுதிகளில் காற்றின் வேகம் குறைவாக இருந்தாலும், புறநகர் பகுதிகளில் அதிகரித்திருந்தது.
அப்பர்பவானி - மஞ்சூர் இடையே கோரகுந்தாவில் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதித்தது. நெடுஞ்சாலைத் துறையினர் மரத்தை அகற்றினர். அப்பர்பவானி, அவலாஞ்சி சுற்றுப்புற நீர்ப்பிடிப்பு பகுதிகளில், ஆறு மாதங்களுக்குப் பின், தண்ணீர் அதிகரித்து வருகிறது.
பந்தலூர் பகுதியில் மேக மூட்டத்தால் வாகனங்களை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. பொன்னானி, சோலாடி ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. குன்னூர் பேரக்ஸ் செல்லும் சாலையில், பந்துமை அருகே, ராட்சத கற்பூர மரத்தின் கிளை சாலையில் விழுந்தது.
அவ்வழியாக வந்த இளைஞர்கள், நெடுஞ்சாலை துறையினர் மரத்தை அகற்றினர். மாவட்ட ஆட்சியர் அம்ரித் கூறுகையில், "மாவட்டத்தில் தொடரும் மழையால், பெரிய அளவில் பாதிப்பு ஏதும் இல்லை. 6 தாலுகாக்களில், 42 மண்டல குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். பாதிப்பு இருந்தால் வருவாய் துறையை அணுகி, நிவாரண முகாமில் தங்கலாம்," என்றார்.