கேரளாவில் மீன்பிடி தடை காலத்தால் கடல் பெரு மீன்கள் விலை கணிசமாக உயர்ந்திருக்கிறது. இரண்டு வாரம் கழித்து மீன் விலை குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை: தமிழ்நாட்டில் மீன்பிடி தடை காலம் முடிந்த நிலையில் கேரளாவில் மீன்பிடி தடை காலம் ஆரம்பித்திருக்கின்றன.
கோயம்புத்தூர் லாரி பேட்டை மொத்த மீன் மார்க்கெட்டில்வஞ்சிரம் 900-ரூபாய்க்கு, விற்கப்படுகிறது. கடல் பெரு மீன்களின் விலை கணிசமாக உயர்ந்து இருக்கின்ற நிலையில், மத்தி நெத்திலி உள்ளிட்ட கடல் சிறு மீன்களின் விலை கணிசமாக குறைந்து இருக்கின்றன.
இதேபோன்று டேம் மீன்கள் கட்லா ரோகு விலை கிலோவுக்கு 50-முதல் 100-ரூபாய் குறைந்து விற்கப்படுகின்றன.
இதனால் தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் பிடிபடும் பெரு மீன்கள் கேரளாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதால் மீன்பிடி தடைக்காலம் தமிழ்நாட்டில் முடிவடைந்த நிலையிலும் மீன்களின் விலை அதிகரித்திருக்கின்றன.
அசைவ பிரியர்களுக்கு வசதியாக டேம் மீன்களின் விலை கணிசமாக குறைந்திருக்கிறது. இந்த நிலை இன்னும் இரண்டு வாரங்களுக்கு மேல் நீடிக்கும் எனவும், பின்னர் மீனின் விலை குறையும் எனவும் மீன் வியாபாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
வஞ்சிரம் - 900
கட்லா - 120
ரோகு - 120
பெரிய நெத்திலி - 300
சின்ன நெத்திலி - 100
மத்தி - 200