கோவை சிறுவாணியில் 66-மில்லி மீட்டர் மழை: நீர்மட்டம் 18-அடியாக உயர்வு..!

சிறுவாணி அணை பகுதியில், 66-மி.மீ., மழை பெய்திருக்கிறது. இதனால் சிற்றருவிகளில் நீர் வரத்து காணப்படுவதால், நீர்மட்டம் 18-அடியாக அதிகரித்திருக்கிறது.


கோவை: மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில், தென்மேற்கு பருவ மழை வலுவாக பெய்ய ஆரம்பித்திருக்கிறது. சிறுவாணி அணையின் நீர்த்தேக்க பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, அணையில், 66 மி.மீ., அடிவாரத்தில் 39 மி.மீ., பெய்திருக்கிறது. குடிநீர் தேவைக்காக, 10 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டது. முத்திக்குளம், பாம்பாறு, பட்டியாறு உள்ளிட்ட சிற்றருவிகளிலிருந்து நீர்வரத்து காணப்படுகிறது.

அதனால், ஒரே நாளில், நீர் மட்டம் இரண்டே கால் அடி உயர்ந்து, 18 அடியாக இருந்தது. அடிவார பகுதியில் பெய்த மழையாலும், மலை முகடுகளில் வழிந்தோடும் நீர் கீழ் நோக்கி வருவதாலும், கோவை குற்றாலத்துக்குத் தண்ணீர் வரத்து அதிகரித்திருக்கிறது.

சித்திரைச்சாவடி அணைக்கட்டிலிருந்து, வினாடிக்கு, 200 கன அடி தண்ணீர், வாய்க்காலில் செல்கிறது. வானிலை ஆராய்ச்சியாளர் சந்தோஷ் கிருஷ்ணன் கூறுகையில், "பாலக்காடு கணவாய் மற்றும் மேற்கு பகுதிகளில் மழைப்பொழிவு காணப்படும். வரும், 20-ம் தேதி வரை இடைவெளி விட்டு மழை பெய்யும். குளங்களுக்கு நீர் வரத்து இருக்கும். அணைகளின் நீர்மட்டம் உயரும்," என்றார்.

Newsletter

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...