கோவை 69வது வார்டு: இன்று முதல் அனைவர் வீட்டிலும் மீண்டும் மஞ்சப்பை வழங்கும் நிகழ்ச்சி!

கோவையில் வீடுதோறும் மஞ்சப்பை வழங்கும் நிகழ்ச்சியை 69 வது வார்டு கவுன்சிலர் பி எஸ் சரவணக்குமார் தொடங்கியுள்ளார்.


கோவை: கோவையில் வீடுதோறும் மஞ்சப்பை வழங்கும் நிகழ்ச்சியை 69 வது வார்டு கவுன்சிலர் பி எஸ் சரவணக்குமார் தொடங்கியுள்ளார்.



பிளாஸ்டிக் பை தடை செய்யப்பட்டுள்ள நிலையில், மஞ்சப்பை பயன்பாடு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.



இந்த நிலையில், கோவையில் மீண்டும் மஞ்சப்பை பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியது.



இது குறித்து கோவை 69 வது வார்டு கவுன்சிலர் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பின்படி மீண்டும் மஞ்சப்பை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஜூன் 5 ஆம் தேதியான இன்று மாலை 5 மணி அளவில் நமது வார்டு காமராஜபுரத்தில் 5 வது வார்டில் மீண்டும் மஞ்சப்பை வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

அது சமயம் நமது மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் நண்பர்கள், தோழர்கள், பொதுமக்கள் என்று அனைவரும் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறேன். அத்துடன் இன்று முதல் நமது 69 வது வார்டில் ஒவ்வொரு வீட்டிற்கும் கவுன்சிலர் ஆகிய நான் செல்லும் நிகழ்ச்சியும், செல்லும் பொழுது மஞ்சள் பைகளை கொடுத்து, வார்டு வீதியில் உள்ள குறைகளை கேட்டு வரும் நிகழ்ச்சியும் தொடங்க உள்ளேன் என்று கூறியிருந்தார்.

மேலும், ஒவ்வொரு வீடாக சென்று அமர்ந்து எல்லோரிடமும் பேசி வருவதற்கு காலம் அதிகம் ஆனாலும், எல்லோர் வீட்டிலும் 2 மஞ்சள் பைகளை கொடுத்து குறைகளை கேட்டு நிவர்த்தி செய்வோம் என்று காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளரும், கவுன்சிலருமான பி எஸ் சரவணக்குமார் கூறியுள்ளார். இந்நிகழ்ச்சியில் திமுக பொறுப்பாளர்கள் ஜார்ஜ் சண்முகம், ஆனந்த், கம்யூனிஸ்ட் தோழர் இளையராஜா, காங்கிரஸ் தோழர்கள் ஆர் கே ரவி, பறக்கும் படை ராஜ்குமார், தென்றல் நாகராஜ், லூயிஸ் குணசேகரன், வெங்கடேஷ், ராவணன், சுரேந்திரன் மற்றும் பிரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...