கோவையில் வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி!

கோவை வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில் தெலுங்குபாளையம், அனுப்பர்பாளையம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.



கோவை: கோவை வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில் தெலுங்குபாளையம், அனுப்பர்பாளையம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.



ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் ஜமாபந்தி நிகழ்ச்சி கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்தது.

இந்த நிலையில் கடந்த 23ம் தேதி முதல் ஜூன் 3ம் தேதி வரை கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.



இதன் ஒரு பகுதியாக இன்று கோவை வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் அனுப்பர்பாளையம், தெலுங்குபாளையம் கிராமத்திற்கு உட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் ஜமாபந்தியில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கினர்.



இதில் தெலுங்குபாளையம் பகுதிக்கு உட்பட்ட, பிஎன் புதூர், சீரநாயக்கன்பாளையம், பூசாரிபாளையத்தில், வேலாண்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கான பென்ஷன் தொகை, முதிர்கன்னிகள் உதவித்தொகை மற்றும் இலவச வீட்டு மனை பட்டா வழங்க மனு அளித்தனர்.



இந்த நிகழ்ச்சியில், கோவை மாநகராட்சி 41 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சாந்தி தலைமையில் பாப்பநாயக்கன்புதூர் பகுதிகளை சேர்ந்த மக்கள் தங்களது பிரச்சனைகள் குறித்து மனு அளித்தனர்.



மனுக்களை பெற்றுக் கொண்ட சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர் முருகேசன், உரிய அதிகாரிகளிடத்தில் இந்த மனுக்களை வழங்கி, இந்த பகுதி மக்களின் குறைகளை நிவர்த்தி செய்து தருவதாக உறுதியளித்தார்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...