கோவையில் வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி!

கோவை வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில் தெலுங்குபாளையம், அனுப்பர்பாளையம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.



கோவை: கோவை வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில் தெலுங்குபாளையம், அனுப்பர்பாளையம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.



ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் ஜமாபந்தி நிகழ்ச்சி கொரோனா தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்தது.

இந்த நிலையில் கடந்த 23ம் தேதி முதல் ஜூன் 3ம் தேதி வரை கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.



இதன் ஒரு பகுதியாக இன்று கோவை வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் அனுப்பர்பாளையம், தெலுங்குபாளையம் கிராமத்திற்கு உட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் ஜமாபந்தியில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கினர்.



இதில் தெலுங்குபாளையம் பகுதிக்கு உட்பட்ட, பிஎன் புதூர், சீரநாயக்கன்பாளையம், பூசாரிபாளையத்தில், வேலாண்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கான பென்ஷன் தொகை, முதிர்கன்னிகள் உதவித்தொகை மற்றும் இலவச வீட்டு மனை பட்டா வழங்க மனு அளித்தனர்.



இந்த நிகழ்ச்சியில், கோவை மாநகராட்சி 41 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சாந்தி தலைமையில் பாப்பநாயக்கன்புதூர் பகுதிகளை சேர்ந்த மக்கள் தங்களது பிரச்சனைகள் குறித்து மனு அளித்தனர்.



மனுக்களை பெற்றுக் கொண்ட சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர் முருகேசன், உரிய அதிகாரிகளிடத்தில் இந்த மனுக்களை வழங்கி, இந்த பகுதி மக்களின் குறைகளை நிவர்த்தி செய்து தருவதாக உறுதியளித்தார்.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...