கோவையில் RTI-சட்டத்தில் கேள்வி கேட்ட சமூக ஆர்வலரை விசாரித்த சம்பவம்: காவல் ஆய்வாளர்களுக்கு மனித உரிமை ஆணையம் அபராதம்..!

RTI-சட்டத்தில் கேள்வி கேட்ட சமூக ஆர்வலரை நள்ளிரவில் வீடு புகுந்து அழைத்துச் சென்று விசாரித்த சம்பவம் தொடர்பாக, கோவை காவல் ஆய்வாளர்களுக்கு மனித உரிமை ஆணையம் ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ளது.


கோவை: RTI-சட்டத்தில் கேள்வி கேட்ட சமூக ஆர்வலரை விசாரித்த சம்பவம் தொடர்பாக, காவல் ஆய்வாளர்களுக்கு மனித உரிமை ஆணையம் அபராதம் விதித்துள்ளது.

கோவை மதுக்கரை அருகே உள்ள திருமலையம்பாளையம் வார்டு 2-ல் கவுன்சிலராக உள்ளவர் ரமேஷ், கடந்த 2019-ஆம் ஆண்டு திருமலையம்பாளையம் பேரூராட்சியில் திட கழிவுகள் மேலாண்மை தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவல் கேட்டிருந்தார்.

இதற்கு ஆரம்பத்திலிருந்தே பேரூராட்சி செயல் அலுவலர் தூண்டுதலின் பேரில் பல்வேறு மிரட்டல்கள் வந்துள்ளதாக ரமேஷ் தெரிவித்து வந்தார்.

இதை தொடர்ந்து சமூக ஆர்வலர் ரமேஷ் வீட்டிற்கு நள்ளிரவில் வந்த அப்போதைய மதுக்கரை காவல் நிலைய ஆய்வாளர் தூயமணி வெள்ளைச்சாமி, வடவள்ளி காவல் நிலைய ஆய்வாளர் மணிவண்ணன், மற்றும் க.க.சாவடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆனந்த் குமார் ஆகியோர் சட்டவிரோதமாக சமூக ஆர்வலரை வீட்டில் இருந்து அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சமூக ஆர்வலர் ரமேஷ் மனித உரிமை ஆணையத்தில் புகார் தெரிவித்திருந்தார். இந்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட மாநில மனித உரிமை ஆணையம் அப்போதைய மதுக்கரை மற்றும் வடவள்ளி ஆய்வாளர்களுக்கு தலா ரூ.25-ஆயிரம், உதவி ஆய்வாளர் ஆனந்தகுமாருக்கு ரூ.50-ஆயிரம் என 3-பேருக்கு மொத்தம் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

மேலும் அவர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது.

Newsletter

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...