வால்பாறை பகுதிகளில் நடந்த தொழிலாளர்கள் பிரதிநிதிகளுக்கான தேர்தலில் தொழிற்சங்கம் சார்பில் போட்டியிட்ட தொழிலாளர்கள் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தொழிற்சங்க தலைவர் அமீது வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் நடைபெற்ற தொழிலாளர்கள் பிரதிநிதிகளுக்கான தேர்தலில் அதிமுக தொழிற்சங்கம் சார்பில் போட்டியிட்ட 5 தொழிலாளர்கள் வெற்றி பெற்றனர்.
பரலை மற்றும் லோயர் பரலை எஸ்டேட் பகுதிகளைச் சேர்ந்த பிரான்சிஸ், தங்கம்மாள், ராமன், பழனியம்மாள் மற்றும் பண்ணிமேடு எஸ்டேட் ஸ்ரீ முப்பிடாதி ஆகியோர் வெற்றி பெற்றனர். இவர்கள் அனைவரும் தொழிற்சங்க அலுவலகத்தில் தொழிற்சங்க தலைவர் வால்பாறை அமீதுக்கு சால்வை அணிவித்து கௌரவித்தனர். தொழிற்சங்கம் தலைவர் அமீது தொழிலாளர்கள் பிரதிநிதிகளுக்கு அறிவுரை வழங்கி வாழ்த்தினார்.
இந்த தொழிலாளர்கள் பிரதிநிதி தேர்தலில் திமுக ஐஎன்டியூசி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவை தலா ஒரு இடங்களில் வெற்றி பெற்றன.
பரலை மற்றும் லோயர் பரலை எஸ்டேட் பகுதிகளைச் சேர்ந்த பிரான்சிஸ், தங்கம்மாள், ராமன், பழனியம்மாள் மற்றும் பண்ணிமேடு எஸ்டேட் ஸ்ரீ முப்பிடாதி ஆகியோர் வெற்றி பெற்றனர். இவர்கள் அனைவரும் தொழிற்சங்க அலுவலகத்தில் தொழிற்சங்க தலைவர் வால்பாறை அமீதுக்கு சால்வை அணிவித்து கௌரவித்தனர். தொழிற்சங்கம் தலைவர் அமீது தொழிலாளர்கள் பிரதிநிதிகளுக்கு அறிவுரை வழங்கி வாழ்த்தினார்.
இந்த தொழிலாளர்கள் பிரதிநிதி தேர்தலில் திமுக ஐஎன்டியூசி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவை தலா ஒரு இடங்களில் வெற்றி பெற்றன.