பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பொய் சொல்வதற்காகவே பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்துகிறார்- அமைச்சர் செந்தில் பாலாஜி!

கோவை மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு புரிதலும் கிடையாது, புரிந்து கொள்ளும் பக்குவமும் கிடையாது. அவர் பொய் சொல்வதற்காகவே பத்திரிகையாளர்களை சந்திக்கிறார் என்று குற்றம் சாட்டியுள்ளார்.


கோவை: கோவை நவ இந்தியா பகுதியில் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது.



இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த செயற்குழு கூட்டத்தில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, தொழிலில் தமிழகத்தின் தலைநகராக கோவை விளங்க முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார். விமான நிலைய விரிவாக்கத்திற்கு 3 மாதத்தில் நிலம் எடுக்கும் பணி நிறைவடையும்.

நாடாளுமன்ற தேர்தலை கவனத்தில் வைத்துக் கொண்டு தொண்டர்கள் செயல்பட வேண்டும் என கூறிய அவர், உள்ளாட்சியில் பெற்ற வாக்குகளை விட கூடுதல் வாக்குகள் பெற வேண்டும் எனவும் தெரிவித்தார். கலைஞரின் பிறந்த நாளை மாவட்டம் முழுவதும் திருவிழா கோலமாக நடத்த வேண்டும். மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்க வேண்டும். அதோடு, மக்களுக்கு பயனுள்ள நிகழ்வாக நடைபெற வேண்டும் எனவும் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் 400 இடங்களில் சாதனை விளக்க தெருமுனை கூட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து இல்லங்களுக்கும் சென்று ஓராண்டு சாதனையை துண்டு பிரசுரமாக கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பத்து சட்டமன்றத் தொகுதியில் திராவிட மாடல் பயிற்சி பயிலரங்கம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கோவையில் சுங்கம் மற்றும் கவுண்டம்பாளையம் பாலங்கள் விரைவில் திறக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும், குடிநீர் தேவைகளை பொறுத்த வரை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை நீர் கிடைக்க பணிகள் நடைபெற்று வருவதாக கூறினார். தனியார் பேருந்துகளை ஒழுங்குபடுத்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டம் நடத்தி சரி செய்யப்படும். மேலும் தனியார் பேருந்துகளில் அதிக வேகத்தை குறைக்க ஆய்வு மேற்கொள்ளப்படும். மருதமலையில் சிறுத்தை நடமாட்டத்தை பிடிக்க பணிகள் விரைவுபடுத்தபட்டுள்ளது. அண்ணாமலை பத்திரிகையாளர்களை தரக்குறைவாக பேசினார். அண்ணாமலை பொய் சொல்வதற்காகவே பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்துகிறார் என்று குற்றம் சாட்டினார்.

அண்ணாமலைக்கு புரிதலும் கிடையாது, புரிந்து கொள்ளும் பக்குவமும் கிடையாது என கூறிய அவர், பத்திரிகையாளர்கள் பக்கத்தையும், தொலைக்காட்சி நேரத்தையும் வீணடிக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டார். முதல்வர் மின்சார உற்பத்தி குறித்து, ஒதுக்கீடு குறித்து பேசியுள்ளார் எனவும், தமிழக வரிகள் வேறு மாநிலங்களுக்கு செல்கிறது. எங்கள் மீது தவறுகள் இருந்து சுட்டிக்காட்டினால் சரி செய்ய தயாராக உள்ளோம் என தெரிவித்தார்.

கோவை மாவட்டத்தில் மின் இணைப்பு கொடுக்காமல் விவசாயிகளுக்கான இலவச மின்சார திட்டத்தில் மோசடி செய்த சம்பவம் மற்றும் பாதிக்கப்பட்ட விவசாயியின் போராட்டம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், சமீபத்தில் விவசாயி போராடிய செய்தி தவறான கருத்து என்றும், இவை குறித்து விசாரிக்கிறேன் எனவும் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்ட திமுக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...