கொடிசியா இராணுவ புத்தாக்க மையம், அடல் தொழில் வளர்த்தெடுப்பு மையம், நிதி ஆயோக், அடல் 'இன்னோவெட்டிவ் மெஷன் இணைந்து நடத்திய இராணுவ புத்தாக்க கண்டுபிடிப்புகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் கோவை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் நடைபெற்றது.
கோவை: கோவை கொடிசியாவில் இராணுவ புத்தாக்க கண்டுபிடிப்புகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
கொடிசியா இராணுவ புத்தாக்க மையம், அடல் தொழில் வளர்த்தெடுப்பு மையம், நிதி ஆயோக், அடல் 'இன்னோவெட்டிவ் மெஷன் இணைந்து நடத்திய இராணுவ புத்தாக்க கண்டுபிடிப்புகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் கோவை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் 30.05.2022 அன்று நடைபெற்றது.
பாதுகாப்பு அமைச்சகத்தின் பாதுகாப்பு உற்பத்தித் துறை முதன்மை செயல் அதிகாரி விவேக் விர்மானி, காணொலி வாயிலாக கூட்டத்தில் கலந்து கொண்டு பாதுகாப்பு துறைக்கு தேவையான இராணுவ தளவாட உற்பத்தி குறித்து எடுத்துரைத்தார்.
கூட்டத்தில் கலந்து கொண்ட ஐத்தின் அரோரா இதற்கான ஒளிப்படக் காட்சியை வெளியிட்டு விளக்கினார்.
தொடர்ந்து நடைபெற்ற இராணுவத்திற்கான உள்நாட்டு உற்பத்தி மற்றும் புத்தாக்க கண்டுபிடிப்புகள் குறித்த விவாத நிகழ்வில் பிஎஸ்ஜி ஸ்டெப் செயல் இயக்குநர் டாக்டர் K. சுரேஷ்குமார், நெறியாளராக செயல்பட்டார். இந்நிகழ்வில் ஏர் கமோடர் KAA சஞ்சீப், நோடல் ஆபிசர், T.K.வரதாராஜன், கமோடர் E.டேவிட் கலந்து கொண்டனர்.
சென்னையில் இருந்து தமிழ்நாடு இராணுவ தொழில்வழித்தட அமைப்பு துணை தலைவர் விங் கமோடர் P.மதுசுதனன் காணொலி மூலம் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.
'இந்த கலந்தாய்வு கூட்டத்தில் கொடிசியா தலைவர் M.V. ரமேஷ் பாபு, CDIIC இயக்குநர்V. சுந்தரம் மற்ற இயக்குநர்கள், கொடிசியா நிர்வாகிகள், சிறுதொழில் நிறுவனங்கள், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், ஆராய்ச்சியாளர்கள், கோவை, சென்னை, திருச்சி மற்றும் கோவில்பட்டி உள்ளிட்ட இடங்களிருந்து மாணவர்களும் கலந்து கொண்டனர்.
கொடிசியா இராணுவ புத்தாக்க மையம், அடல் தொழில் வளர்த்தெடுப்பு மையம், நிதி ஆயோக், அடல் 'இன்னோவெட்டிவ் மெஷன் இணைந்து நடத்திய இராணுவ புத்தாக்க கண்டுபிடிப்புகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் கோவை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் 30.05.2022 அன்று நடைபெற்றது.
பாதுகாப்பு அமைச்சகத்தின் பாதுகாப்பு உற்பத்தித் துறை முதன்மை செயல் அதிகாரி விவேக் விர்மானி, காணொலி வாயிலாக கூட்டத்தில் கலந்து கொண்டு பாதுகாப்பு துறைக்கு தேவையான இராணுவ தளவாட உற்பத்தி குறித்து எடுத்துரைத்தார்.
கூட்டத்தில் கலந்து கொண்ட ஐத்தின் அரோரா இதற்கான ஒளிப்படக் காட்சியை வெளியிட்டு விளக்கினார்.
தொடர்ந்து நடைபெற்ற இராணுவத்திற்கான உள்நாட்டு உற்பத்தி மற்றும் புத்தாக்க கண்டுபிடிப்புகள் குறித்த விவாத நிகழ்வில் பிஎஸ்ஜி ஸ்டெப் செயல் இயக்குநர் டாக்டர் K. சுரேஷ்குமார், நெறியாளராக செயல்பட்டார். இந்நிகழ்வில் ஏர் கமோடர் KAA சஞ்சீப், நோடல் ஆபிசர், T.K.வரதாராஜன், கமோடர் E.டேவிட் கலந்து கொண்டனர்.
சென்னையில் இருந்து தமிழ்நாடு இராணுவ தொழில்வழித்தட அமைப்பு துணை தலைவர் விங் கமோடர் P.மதுசுதனன் காணொலி மூலம் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.
'இந்த கலந்தாய்வு கூட்டத்தில் கொடிசியா தலைவர் M.V. ரமேஷ் பாபு, CDIIC இயக்குநர்V. சுந்தரம் மற்ற இயக்குநர்கள், கொடிசியா நிர்வாகிகள், சிறுதொழில் நிறுவனங்கள், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், ஆராய்ச்சியாளர்கள், கோவை, சென்னை, திருச்சி மற்றும் கோவில்பட்டி உள்ளிட்ட இடங்களிருந்து மாணவர்களும் கலந்து கொண்டனர்.