குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால், கணவன் -மனைவி இடையே அடிக்கடி தகராறு என தொடர் பிரச்சனை இருந்து வந்ததால், கிருஷ்ணன் கடும் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
கோவை: கோவை செட்டிபாளையம் அன்னை இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (30), செட்டிபாளையம் பேரூராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு, ஒரு வருடத்திற்கு முன்பு தான் சுஜிதா (21) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது.
குடிப்பழக்கத்துக்கு அடிமையான கிருஷ்ணன், தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததால், அடிக்கடி கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும், திருமணம் ஆகி ஒரு வருடம் ஆன நிலையில்,குழந்தை இல்லை மற்றும் குடும்பத்தில் தொடர் பிரச்சனை இருந்து வந்ததால், கிருஷ்ணன் கடும் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த சூழலில், நேற்று இரவு கிருஷ்ணன் வழக்கமாக வீட்டுக்கு தூங்கச் சென்றார். பின்னர், இரவு 10 மணி அளவில் மனைவி சுஜிதா, அவரது அறையின் கதவை தட்டிய போது திறக்கவில்லை.
இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் உதவியோடு அறையின் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, கிருஷ்ணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதையடுத்து, அங்கிருந்தவர்கள் செட்டிபாளையம் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கிருஷ்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குடிப்பழக்கத்துக்கு அடிமையான கிருஷ்ணன், தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததால், அடிக்கடி கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும், திருமணம் ஆகி ஒரு வருடம் ஆன நிலையில்,குழந்தை இல்லை மற்றும் குடும்பத்தில் தொடர் பிரச்சனை இருந்து வந்ததால், கிருஷ்ணன் கடும் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த சூழலில், நேற்று இரவு கிருஷ்ணன் வழக்கமாக வீட்டுக்கு தூங்கச் சென்றார். பின்னர், இரவு 10 மணி அளவில் மனைவி சுஜிதா, அவரது அறையின் கதவை தட்டிய போது திறக்கவில்லை.
இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் உதவியோடு அறையின் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, கிருஷ்ணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதையடுத்து, அங்கிருந்தவர்கள் செட்டிபாளையம் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கிருஷ்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.