கோவை செட்டிபாளையம் பேரூராட்சி துப்புரவு பணியாளர் தூக்கிட்டு தற்கொலை; போலீசார் விசாரணை.

குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால், கணவன் -மனைவி இடையே அடிக்கடி தகராறு என தொடர் பிரச்சனை இருந்து வந்ததால், கிருஷ்ணன் கடும் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.


கோவை: கோவை செட்டிபாளையம் அன்னை இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (30), செட்டிபாளையம் பேரூராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு, ஒரு வருடத்திற்கு முன்பு தான் சுஜிதா (21) என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது.

குடிப்பழக்கத்துக்கு அடிமையான கிருஷ்ணன், தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததால், அடிக்கடி கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும், திருமணம் ஆகி ஒரு வருடம் ஆன நிலையில்,குழந்தை இல்லை மற்றும் குடும்பத்தில் தொடர் பிரச்சனை இருந்து வந்ததால், கிருஷ்ணன் கடும் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த சூழலில், நேற்று இரவு கிருஷ்ணன் வழக்கமாக வீட்டுக்கு தூங்கச் சென்றார். பின்னர், இரவு 10 மணி அளவில் மனைவி சுஜிதா, அவரது அறையின் கதவை தட்டிய போது திறக்கவில்லை.

இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் உதவியோடு அறையின் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, கிருஷ்ணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதையடுத்து, அங்கிருந்தவர்கள் செட்டிபாளையம் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கிருஷ்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...