கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சாந்திக்கு தொடர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கோவை: கோவை மலுமிச்சம்பட்டியில்
விஷப்பாம்பு கடித்து அரசு மருத்துவமனையில்சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மலுமிச்சம்பட்டி பகுதியை சேர்ந்தவர் அந்தோணிசாமி (49), சாந்தி (48) தம்பதி. தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த அவர், மனைவி மற்றும் 2 மகன்களுடன் அவ்வை நகரில் வசித்து வருகிறார்.
கடந்த 22ஆம் தேதி அனைவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, இரவு 12 மணியளவில் விஷப்பாம்பு சாந்தியைக் கடித்ததாக தெரிகிறது. இதையடுத்து, வீட்டில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளித்து, உடனடியாக கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சாந்தியை அழைத்துச் சென்றனர்.
கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சாந்திக்கு தொடர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பாக செட்டிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விஷப்பாம்பு கடித்து அரசு மருத்துவமனையில்சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மலுமிச்சம்பட்டி பகுதியை சேர்ந்தவர் அந்தோணிசாமி (49), சாந்தி (48) தம்பதி. தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த அவர், மனைவி மற்றும் 2 மகன்களுடன் அவ்வை நகரில் வசித்து வருகிறார்.
கடந்த 22ஆம் தேதி அனைவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, இரவு 12 மணியளவில் விஷப்பாம்பு சாந்தியைக் கடித்ததாக தெரிகிறது. இதையடுத்து, வீட்டில் இருந்தவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளித்து, உடனடியாக கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சாந்தியை அழைத்துச் சென்றனர்.
கோவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சாந்திக்கு தொடர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பாக செட்டிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.