கோவையில் தென்னிந்திய அளவிலான வீல்சேர் கூடைப்பந்து போட்டி- மாற்றுதிறனாளிகள் அசத்தல்..! .

விளையாட்டு துறையில் மாற்று திறனாளிகளை ஊக்குவிக்கும் விதமாக சிற்றுளி பவுண்டேஷன் மற்றும் 'வீல் சேர் பெடரேஷன் ஆப் இந்தியா' இணைந்து நடத்திய மாற்றுத்திறனாளிகளுக்கான தென் மண்டல அளவிலான 'வீல் சேர்' கூடைப்பந்து போட்டி, பி.எஸ்.ஜி தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெற்றது.


கோவை: விளையாட்டு துறையில் மாற்று திறனாளிகளை ஊக்குவிக்கும் விதமாக சிற்றுளி பவுண்டேஷன் மற்றும் 'வீல் சேர் பெடரேஷன் ஆப் இந்தியா' இணைந்து நடத்திய மாற்றுத்திறனாளிகளுக்கான தென் மண்டல அளவிலான 'வீல் சேர்' கூடைப்பந்து போட்டி, பி.எஸ்.ஜி தொழில்நுட்ப கல்லூரியின் உள் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.



தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, பாண்டிச்சேரி உள்ளிட்ட 6 மாநிலங்களில் இருந்து பெண்கள் பிரிவில் 3 அணிகள், ஆண்கள் பிரிவில் 6 அணிகள் என மொத்தம் 9 அணிகள் இந்த போட்டியில் பங்கேற்றனர்.



விறு விறுப்பாக நடைபெற்ற இறுதி போட்டியில் ஆண்கள் பிரிவில், தெலுங்கானா மற்றும் தமிழ்நாடு அணியும் மோதி கொண்டதில், தமிழகம் முதலிடத்தையும், தெலுங்கானா இரண்டாவது இடத்தையும் பிடித்தது.



இதே போல, பெண்கள் பிரிவில் தமிழகம், கர்நாடக அணி மோதியதில் கர்நாடக முதல் இடத்தையும் தமிழகம் இரண்டாவது இடத்தையும் பிடித்தது. தொடர்ந்து, வெற்றி பெற்ற மாற்று திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு, மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். சமீரன் மற்றும் நடிகர் சதீஷ் கலந்து கொண்டு கோப்பைகள், சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினர்.



"மாற்று திறனாளிகள் சிறு வயதில் இருந்து பல்வேறு சவால்களை கடந்து வந்துள்ளனர். இம்மாதிரியான போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் தான் நிஜத்தில் "ஹீரோ", என்று நடிகர் சதிஷ் புகழாரம் சூட்டினார்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...