கோவையில் காதலிப்பதாக கூறி இளம்பெண்ணிற்கு பாலியல் வன்புணர்வு - தனியார் நிறுவன ஒப்பந்த ஓட்டுநர் கைது..!

கோவை செட்டிபாளையம் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த 23 வயது பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் வன்புணர்வு செய்த ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவையில் காதலிப்பதாக கூறி இளம்பெண்ணுக்கு பாலியல் வன்புணர்வு செய்த ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.

கோவை செட்டிபாளையத்தில் செயல்பட்டு வரும் தனியார் எம்.என்.சி நிறுவனத்தில் பணியாற்றி வரும் கோவையை சேர்ந்த 22 வயது பெண் ஒருவர் செட்டிபாளையம் போலீசில் புகார் அளித்துள்ளார்.

அதில் தான் கடந்த 11 மாதங்களாக ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருவதாகவும், அதே நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்பட்டு வரும் டிராவல்ஸில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்த அப்துல்ஹமீது என்பவர் தனக்கு திருமணம் ஆனதை மறைத்துகாதலிப்பதாகக் கூறி பழகி வந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும், அடிக்கடி செல்போனில் இருவரும் பேசி வந்த நிலையில் தன்னை அப்துல்ஹமீது பல முறை வெளியே அழைத்துச் சென்று வந்ததாகவும், அப்போது கட்டாயப்படுத்தி பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டு வந்ததாகவும்தெரிவித்துள்ளார்.

மேலும், தன்னிடமிருந்து பல முறை பணத்தையும் வாங்கியுள்ளதாக கூறிய அந்த பெண் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இந்நிலையில், இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் அப்துல் ஹமீது பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அவர் காதலிப்பதாக கூறி பழகி ஏமாற்றியது தெரியவந்தது. மேலும், பெண்ணுடன் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்களை செல்போனில் வைத்திருப்பதும் தெரியவந்ததுள்ளது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...