நேற்று பெரும்பாலான இடங்களில் சோதனை நிறைவடைந்த நிலையில், அந்த உணவகத்தின் வடவள்ளி, லட்சுமி மில்ஸ் உள்ளிட்ட கிளைகள் உட்பட ஐந்து இடங்களில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் காலை 7 மணி முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: வரி ஏய்ப்பு புகாரின் பேரில், கோவையில் ஶ்ரீ ஆனந்தாஸ் உணவகக் குழுமத்துக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று சோதனை நடத்தினார். அந்த உணவகக் குழுமத்தின் உரிமையாளரின் வீடு உள்ளிட்ட 20 இடங்களில் 40-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் குழு சனிக்கிழமை காலை முதல் சோதனையில் ஈடுபட்டனர்.
நேற்று பெரும்பாலான இடங்களில் சோதனை நிறைவடைந்த நிலையில், ஆனந்தாஸ் உணவகத்தின் வடவள்ளி, லட்சுமி மில்ஸ் உள்ளிட்ட கிளைகள் உட்பட ஐந்து இடங்களில், இரண்டாவது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் காலை 7 மணி முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
வடவள்ளி உள்ளிட்ட சில கிளைகளில், மூன்று நாட்களுக்கு வருமான வரி சோதனை தொடரலாம் என கூறப்பட்ட நிலையில், இன்று இரண்டாவது நாள் வருமான வரித்துறை அதிகாரிகள்தீவிரமாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.