வனத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டதில், வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளதால் மருதமலை கோவிலுக்கு செல்ல இரவு 7 மணிக்கு மேல் பக்தர்களுக்கு தடை விதிக்கப்படுவதாக, கோவில் நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.
கோவை: கோவை மருதமலை பகுதியில் இருந்து தடாகம் அனுபாவி சுப்பிரமணியர் கோவில் வரை உள்ள மலையை ஒட்டிய வனப்பகுதியில் காட்டு யானைகள், சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் வழக்கமாக இருக்கும்.
நேற்று நள்ளிரவு நேரத்தில் மருதமலை கோவில் தேர் நிறுத்துமிடம் மற்றும் ராஜகோபுரம் முன்பகுதியில் சிறுத்தை கடந்து சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து வனத்துறையினர் கூறும் போது, அப்பகுதியில் வழக்கமாக யானைகள், சிறுத்தைகள் கடந்து செல்வது வழக்கம். இருப்பினும், அங்கு வனத்துறை குழுவினர் தொடர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த காலங்களில் 3 சிறுத்தைகள் ஒரே நேரத்தில் அப்பகுதியை கடந்துள்ளது. வன குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளதால், பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை, என தெரிவித்துள்ளனர்.
மேலும், மருதமலை கோவிலில் சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்பட்டது தொடர்பாக கோவில் நிர்வாகத்தினர் கூறும் போது, வனத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டதில், வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளதால் மருதமலை கோவிலுக்கு செல்ல இரவு 7 மணிக்கு மேல் பக்தர்களுக்கு தடை விதிக்கப்படுவதாக, அறிவித்துள்ளனர்.

மேலும், இதற்கான அறிவிப்பு பலகையை கோவிலில் பல்வேறு பகுதிகளில் பக்தர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று நள்ளிரவு நேரத்தில் மருதமலை கோவில் தேர் நிறுத்துமிடம் மற்றும் ராஜகோபுரம் முன்பகுதியில் சிறுத்தை கடந்து சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து வனத்துறையினர் கூறும் போது, அப்பகுதியில் வழக்கமாக யானைகள், சிறுத்தைகள் கடந்து செல்வது வழக்கம். இருப்பினும், அங்கு வனத்துறை குழுவினர் தொடர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த காலங்களில் 3 சிறுத்தைகள் ஒரே நேரத்தில் அப்பகுதியை கடந்துள்ளது. வன குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளதால், பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை, என தெரிவித்துள்ளனர்.
மேலும், மருதமலை கோவிலில் சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்பட்டது தொடர்பாக கோவில் நிர்வாகத்தினர் கூறும் போது, வனத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டதில், வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளதால் மருதமலை கோவிலுக்கு செல்ல இரவு 7 மணிக்கு மேல் பக்தர்களுக்கு தடை விதிக்கப்படுவதாக, அறிவித்துள்ளனர்.
மேலும், இதற்கான அறிவிப்பு பலகையை கோவிலில் பல்வேறு பகுதிகளில் பக்தர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.