கோவை மாவட்டத்தில் காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன மின்னணு வீடியோ வாகனத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதனை அங்கிருந்த பொதுமக்கள் பலரும் கண்டு களித்தனர்.
கோவை: சென்னை ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் ரூபாய் 1.75 கோடி மதிப்பில் பொதுப்பணித்துறை சார்பில் 16 அடி உயரத்தில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் வெண்கல சிலை திறப்பு விழா நடைபெற்றது. கலைஞரின் சிலையை குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உட்பட அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த சிலை திறப்பு நிகழ்ச்சியை பல்வேறு மாவட்டங்களில் மக்கள் அதிகம் கூடும் இடத்தில் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், கோவை மாவட்டத்தில் காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன மின்னணு வீடியோ வாகனத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இதனை அங்கிருந்த பொதுமக்கள் பலரும் கண்டு களித்தனர்.
இந்நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உட்பட அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த சிலை திறப்பு நிகழ்ச்சியை பல்வேறு மாவட்டங்களில் மக்கள் அதிகம் கூடும் இடத்தில் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், கோவை மாவட்டத்தில் காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் அதிநவீன மின்னணு வீடியோ வாகனத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இதனை அங்கிருந்த பொதுமக்கள் பலரும் கண்டு களித்தனர்.