கோவையில் நடைபயிற்சி சென்ற ஆசிரியையின் 3.5 தாலிச் செயின் பறிப்பு…!

நேற்று இரவு தனது மகளுடன் வழக்கமாக நடைபயிற்சிக்கு பாரதி பார்க் சாலை அருகே சென்றபோது, இரு சக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த இரு மர்ம நபர்கள் அவரின் கழுத்தில் அணிந்திருந்த 3.5 சவரன் தாலி செயினை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.


கோவை: கோவை சாய்பாபா காலனி, அவிநாசிலிங்கம் கல்லூரி அருகே உள்ள ராமலிங்கம் காலனியை சேர்ந்தவர் கோமளவல்லி (47). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் இந்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

வழக்கமாக, கோமளவல்லி தனது மகளுடன் தினமும் வீட்டின் அருகே நடைபயிற்சி மேற்கொள்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இந்த நிலையில், நேற்று இரவு தனது மகளுடன் கோமளவல்லி வழக்கமாக நடைபயிற்சிக்கு சென்றுள்ளார். அப்போது, பாரதி பார்க் சாலை அருகே சென்றபோது, இரு சக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் 2 பேர் அவரின் கழுத்தில் அணிந்திருந்த 3.5 சவரன் தாலி செயினை பறித்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இதனால் நிலைகுலைந்த கோமளவல்லி மற்றும் அவரது மகள் சத்தம் போடவே அங்கிருந்தவர்கள் தப்பிச் சென்ற நபர்களை பிடிக்க முயன்றனர். ஆனால், அவர்கள் கண் இமைக்கும் நேரத்தில் அந்த மர்ம நபர்கள் தப்பிச் சென்றனர். இதையடுத்து, சம்பவம் குறித்து கோமளவல்லி சாய்பாபா காலனி போலீசில் புகார் அளித்தார்.

புகார் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தாலி செயினை பறித்துக் கொண்டு தப்பி சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...