கொடிசியா வளாகம் முதல் சத்தியமங்கலம் சாலை இணைக்கும் திட்ட சாலை பணிக்கு ஆய்வு: மக்கள் மத்தியில் நம்பிக்கை!

கோவையில் கொடிசியா வர்த்தக கண்காட்சி வளாகம் முதல் விளாங்குறிச்சி வழியாக சத்தியமங்கலம் சாலையை இணைக்கும் திட்ட சாலை பணியை துவக்க மாநகராட்சி அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.



கோவை: கோவை மாநகரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறிப்பாக அவிநாசி சாலையில் அமைந்துள்ள கொடிசியா வர்த்தக கண்காட்சி வளாகம் அருகே தொடங்கி என்ஆர்ஐ கார்டன், கோ ஆப்ரெட்டிவ் காலனி, விளாங்குறிச்சி வழியாக சத்தியமங்கலம் சாலையை இணைக்கும் திட்ட சாலை பணியை துவக்க வேண்டும் என மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மக்களின் தேவையை உணர்ந்து இந்த வழித்தடத்தில் உள்ள நில உரிமையாளர்கள் சிலர் தாமாக முன்வந்து அரசுக்கு தங்களது நிலத்தை வழங்க ஒப்புதல் தெரிவித்துள்ளனர்.

இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோ ஆப்ரெட்டிவ் காலனி நல சங்க நிர்வாகிகள் ராமசாமி, ராஜசேகர் ஆகியோர் 22வது வார்டு கவுன்சிலர் கோவை பாபுவிடம் தெரிவித்தனர். கோவை மாநகராட்சி மாமன்ற முதல் கூட்டத்திலேயே கவுன்சிலர் கோவை பாபு இந்த கோரிக்கை குறித்து பேசினார்.



இன்று காலை நகரமைப்பு அதிகாரி ஜெயலட்சுமி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு பணி மேற்கொண்டர்.



கொடிசியா வளாகம் அருகே உள்ள கீதாஞ்சலி பள்ளி வளாகம் அருகே தொடங்கி வடக்கு திசையில் காலி மனையிட நிலங்கள் வழியாக என் ஆர்.ஜ கார்டன் குடியிருப்பு சாலையுடன் இணைந்து சற்று மேற்கு திசையில் திரும்பி அங்கிருந்து வடக்கு முகமாக சென்று எஸ்.ஆர் அவென்யூ, கோ ஆப்ரெட்டிவ் காலனி மற்றும் ஸ்ரீ ராகவேந்திரா அவென்யூ வழியாக சேரன்மாநகர் குடியிருப்பு வழியாக திட்ட சாலையில் இணைந்து விளாங்குறிச்சி வழியாக சத்தியமங்கலம் பிரதான சாலையில் இணைக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

இதையடுத்து நில மதிப்பீடு பணி தொடர்பாக நில உரிமையாளரிடம் பேச்சுவார்த்தை உள்ளிட்ட அடுத்த கட்ட பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பல ஆண்டுகளுக்குப் பின் சாலை பணிக்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது மக்கள் மத்தியில் மிகுந்த நம்பிக்கை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...