கோவை மாநகராட்சியில் 37 கடைகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 474 பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு கடை உரிமையாளர்களுக்கு ரூ.34,000 வரையில் அபராதம் விதிக்கப்பட்டது.
கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி துணை ஆணையர் மோ.ஷர்மிளா, மாநகராட்சி நகர்நல அலுவலர் சதீஷ்குமார் ஆகியோர் உத்தரவின்பேரில், வடக்கு மண்டலம் பகுதிகளில் செயல்பட்டு வரும் 37 கடைகளில் மாநகராட்சி மண்டல சுகாதார அலுவலர் இராதாகிருஷ்ணன் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

இதில், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து, கடையிலிருந்த 470 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, கடைகளின் உரிமையாளர்களுக்கு மொத்தம் ரூ.32,000/- அபராதம் விதிக்கப்பட்டது.

இதே போன்று, கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம், 73வது வார்டுக்கு உட்பட்ட மருதமலை சாலையில் உள்ள பழமுதிர் நிலையத்தில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் சலேத் ஆய்வு செய்யப்பட்டதில், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தியதால் 4 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, கடைகளின் உரிமையாளர்களுக்கு மொத்தம் ரூ.2,000/- அபராதம் விதிக்கப்பட்டது.
இதில், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து, கடையிலிருந்த 470 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, கடைகளின் உரிமையாளர்களுக்கு மொத்தம் ரூ.32,000/- அபராதம் விதிக்கப்பட்டது.
இதே போன்று, கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம், 73வது வார்டுக்கு உட்பட்ட மருதமலை சாலையில் உள்ள பழமுதிர் நிலையத்தில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் சலேத் ஆய்வு செய்யப்பட்டதில், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தியதால் 4 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, கடைகளின் உரிமையாளர்களுக்கு மொத்தம் ரூ.2,000/- அபராதம் விதிக்கப்பட்டது.