வரி ஏய்ப்பு தொடர்பாக ஸ்ரீ ஆனந்தாஸ் குழுமத்தை மொத்தம் 40 குழுக்கள் அமைத்து வருமானவரி துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை: கோவை ஶ்ரீ ஆனந்தாஸ் உணவக கிளைகளில்வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் பல உயர்தர சைவ உணவகங்களும் பலகார கடைகளையும் நடத்தி வருகிறது. இந்நிலையில், வரி ஏய்ப்பு தொடர்பாக ஸ்ரீ ஆனந்தாஸ் குழுமத்தில் மொத்தம் 40 குழுக்கள் அமைத்து வருமான துறை அதிகாரிகள் இன்று காலை முதல்சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டத்தில் ஶ்ரீ ஆனந்தாஸ் உணவகத்தின் கிளைகள், வடவள்ளி, லட்சுமி மில்ஸ், சுந்தராபுரம், ராம்நகர், ஆர்.எஸ்.புரம், காந்திபுரம், புரூக்பீல்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் வருமான வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகார் அடிப்படையில், இன்று காலை 6 மணி முதல் 40 குழுக்களாக வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் நெல்லை மற்றும் கோவையில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், ஆனந்தாஸ் உரிமையாளர் மணிகண்டன் வீட்டிலும் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
முன்னதாக, வடவள்ளியில் உள்ள ஆனந்தாஸ் உணவகத்திற்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனைக்கு சென்ற போது,, அங்கிருந்த நிர்வாகத்தினர் அடையாள அட்டை கேட்டு வெளியே நிற்க வைத்ததாகவும், உள்ளூர் போலீசாருக்கும் தகவல் அளித்தாக தெரிகிறது.
இதையடுத்து, போலீசார் வந்த பின்னரே வருமான வரித்துறை சோதனையானது நடைபெற்று வருகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.