அம்மன் ஈமு பார்ம் நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரான சிதம்பரத்திற்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2.6 கோடி அபராதமும் விதித்தும், அபராத தொகையில் ரூ.2 கோடியை முதலீட்டாளர்களுக்கு பிரித்து வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
கோவை: ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியை சேர்ந்தவர்கள் செந்தில் நாதன் (37), சிதம்பரம் (40) ஆகிய இருவரும் இணைந்து கடந்த 2011-ம் ஆண்டு ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் அம்மன் ஈமு பார்ம்என்ற நிறுவனத்தை துவங்கியுள்ளனர்.
இந்த நிறுவனத்தில் முதலீடு செய்யும் பொதுமக்களுக்கு, 2 சலுகை திட்டங்களை அறிவித்தனர். அதன்படி, முதலாவது திட்டத்தில் ரூ.1½ லட்சம் முதலீடு செய்தால் 6 ஈமு கோழிகள் மற்றும் மாதம் ரூ.6 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும் மற்றும்
ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் போனஸ் வழங்கப்படுவதுடன் 3 ஆண்டுகளில் முதலீட்டு தொகை திரும்ப வழங்கப்படும் எனவும் மற்றொரு திட்டத்தில் முதலீடு செய்தால் மாதம் ரூ.7 ஆயிரம் ஊக்கத்தொகையும், 24 மாதங்களில் முதலீட்டு தொகை திரும்ப வழங்கப்படும் என்று அறிவித்தனர்.
இதனை நம்பிய ஏராளமான பொதுமக்கள், இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர். ஆனால், அறிவித்தப்படி அந்த நிறுவனம் பணம் வழங்காமல் சுமார் 129 பேரிடம் இருந்து ரூ.4.34 கோடி மோசடி செய்தனர். இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். மேலும், இந்த வழக்கு கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் பாதுகாப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதனைடையே, ஈமு பார்ம்ஸ் நிறுவன உரிமையாளர்களில் ஒருவரான செந்தில் நாதன் வழக்கில் ஆஜராகாமல் தலைமறைவாகி விட்டார்.
இதையடுத்து அவர் மீதான குற்றச்சாட்டு பிரிக்கப்பட்டு தனி வழக்காக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கில் நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரான சிதம்பரத்திற்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2.6 கோடி அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், அபராத தொகை ரூ.2 கோடியை முதலீட்டாளர்களுக்கு பிரித்து வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த நிறுவனத்தில் முதலீடு செய்யும் பொதுமக்களுக்கு, 2 சலுகை திட்டங்களை அறிவித்தனர். அதன்படி, முதலாவது திட்டத்தில் ரூ.1½ லட்சம் முதலீடு செய்தால் 6 ஈமு கோழிகள் மற்றும் மாதம் ரூ.6 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும் மற்றும்
ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் போனஸ் வழங்கப்படுவதுடன் 3 ஆண்டுகளில் முதலீட்டு தொகை திரும்ப வழங்கப்படும் எனவும் மற்றொரு திட்டத்தில் முதலீடு செய்தால் மாதம் ரூ.7 ஆயிரம் ஊக்கத்தொகையும், 24 மாதங்களில் முதலீட்டு தொகை திரும்ப வழங்கப்படும் என்று அறிவித்தனர்.
இதனை நம்பிய ஏராளமான பொதுமக்கள், இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர். ஆனால், அறிவித்தப்படி அந்த நிறுவனம் பணம் வழங்காமல் சுமார் 129 பேரிடம் இருந்து ரூ.4.34 கோடி மோசடி செய்தனர். இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். மேலும், இந்த வழக்கு கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் பாதுகாப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதனைடையே, ஈமு பார்ம்ஸ் நிறுவன உரிமையாளர்களில் ஒருவரான செந்தில் நாதன் வழக்கில் ஆஜராகாமல் தலைமறைவாகி விட்டார்.
இதையடுத்து அவர் மீதான குற்றச்சாட்டு பிரிக்கப்பட்டு தனி வழக்காக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கில் நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரான சிதம்பரத்திற்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2.6 கோடி அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், அபராத தொகை ரூ.2 கோடியை முதலீட்டாளர்களுக்கு பிரித்து வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.