கோவை மருதமலையில் 500 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம் - தன்னார்வ அமைப்புடன் கைகோர்த்த மாணவர்கள்..!

அதன்படி, கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு தன்னார்வலர்கள் மற்றும் சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் 70 க்கும் மேற்பட்டோர் இணைந்து கோவை மருதமலை பகுதியில் உள்ள பிளாஸ்டிக் குப்பைகளை சேகரிக்கும் களப்பணியில் ஈடுபட்டனர்.



கோவை: கோவையில் வனப்பகுதி மற்றும் மலை அடிவாரங்களில் சுற்றுலா செல்லும் பொதுமக்கள் பிளாஸ்ட் கழிவுகளை வீசிச் செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதனால், சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதோடு, வனவிலங்குகளும் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகிறது.



இந்நிலையில், கோவை மாவட்ட வனத்துறை தன்னார்வலர்கள் பங்களிப்போடு வனப்பகுதியை ஓட்டியுள்ள இடங்களில் பிளாஸ்டிக் கழிவுகளை டன் கணக்கில் அகற்றி வருகின்றனர்.



அதன்படி, கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு தன்னார்வலர்கள் மற்றும் சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் 70 க்கும் மேற்பட்டோர் இணைந்து கோவை மருதமலை பகுதியில் உள்ள பிளாஸ்டிக் குப்பைகளை சேகரிக்கும் களப்பணி இன்று ஈடுபட்டனர்.



இந்த களப்பணியில் சுமார் 500 கிலோ அளவிலான பிளாஸ்டிக் குப்பைகளைஅகற்றியுள்ளனர். சுற்றுச்சூழல் ஆர்வலர்களை தாண்டி மாணவ, மாணவியரும் இம்மாதிரியாக சமூக பணியில் ஈடுபடுவது பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.



மேலும், குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட மாணவர்கள் பிளாஸ்டிக் குப்பைகள் அப்புறப்படுத்துவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வுவை ஏற்படுத்தினர்.



Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...