மின் மயானம் அமைக்க எதிர்ப்பு: கோவை கிணத்துக்கடவில் நடைபெறும் ஜமாபந்தியில் கிராம மக்கள் மனு..!

மின் மயானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிணத்துக்கடவு தாலுகா அலுவலகத்தில் நடைபெறும் ஜமாபந்தியில் கொண்டம்பட்டி கிராம மக்கள் மனு அளித்தனர்.


கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் ஜமாபந்தி இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது.



இன்று கிணத்துக்கடவு உள் வட்டத்திற்கு உட்பட்ட கிணத்துக்கடவு நகரம், கொண்டம்பட்டி, கோதவாடி, சொக்கனூர், வடபுதூர், அரசம்பாளையம், உள்ளிட்ட 11 கிராமங்களுக்கு நடைபெற்றது.

இதில் கொண்டம்பட்டி கிராமத்திலிருந்து வந்த 200-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அப்பகுதியில் அமைக்கப்பட உள்ள மின் மயானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜமாபந்தி அதிகாரியான மாவட்ட வருவாய் அலுவலர் கலால்துறை இணை ஆணையர் சுபா நந்தினியிடம் கிராம மக்கள் மனு அளித்தனர்.



இதைப்போல் கோதவாடி கிராமத்தில் கால்நடை மருத்துவமனை, சமுதாயக்கூடம், எல்லை விரிவாக்கம், பேருந்து வசதி போன்ற கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஊராட்சி மன்றத் தலைவர் ரத்தினசாமி மற்றும் துணைத் தலைவர் பரமசிவம் ஆகியோர் மனு அளித்தனர்.



இன்று 11 கிராமங்களுக்கு ஒரே நாளில் ஜமாபந்தி நடைபெறுவதால் தாலுகா அலுவலகத்தில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

இதனால் கிணத்துக்கடவு காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் உதவி ஆய்வாளர் கருப்பசாமி பாண்டியன் ஆகியோர் தலைமையில் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...