மின் மயானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிணத்துக்கடவு தாலுகா அலுவலகத்தில் நடைபெறும் ஜமாபந்தியில் கொண்டம்பட்டி கிராம மக்கள் மனு அளித்தனர்.
கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் ஜமாபந்தி இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது.

இன்று கிணத்துக்கடவு உள் வட்டத்திற்கு உட்பட்ட கிணத்துக்கடவு நகரம், கொண்டம்பட்டி, கோதவாடி, சொக்கனூர், வடபுதூர், அரசம்பாளையம், உள்ளிட்ட 11 கிராமங்களுக்கு நடைபெற்றது.
இதில் கொண்டம்பட்டி கிராமத்திலிருந்து வந்த 200-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அப்பகுதியில் அமைக்கப்பட உள்ள மின் மயானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜமாபந்தி அதிகாரியான மாவட்ட வருவாய் அலுவலர் கலால்துறை இணை ஆணையர் சுபா நந்தினியிடம் கிராம மக்கள் மனு அளித்தனர்.

இதைப்போல் கோதவாடி கிராமத்தில் கால்நடை மருத்துவமனை, சமுதாயக்கூடம், எல்லை விரிவாக்கம், பேருந்து வசதி போன்ற கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஊராட்சி மன்றத் தலைவர் ரத்தினசாமி மற்றும் துணைத் தலைவர் பரமசிவம் ஆகியோர் மனு அளித்தனர்.

இன்று 11 கிராமங்களுக்கு ஒரே நாளில் ஜமாபந்தி நடைபெறுவதால் தாலுகா அலுவலகத்தில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
இதனால் கிணத்துக்கடவு காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் உதவி ஆய்வாளர் கருப்பசாமி பாண்டியன் ஆகியோர் தலைமையில் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.
இன்று கிணத்துக்கடவு உள் வட்டத்திற்கு உட்பட்ட கிணத்துக்கடவு நகரம், கொண்டம்பட்டி, கோதவாடி, சொக்கனூர், வடபுதூர், அரசம்பாளையம், உள்ளிட்ட 11 கிராமங்களுக்கு நடைபெற்றது.
இதில் கொண்டம்பட்டி கிராமத்திலிருந்து வந்த 200-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அப்பகுதியில் அமைக்கப்பட உள்ள மின் மயானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜமாபந்தி அதிகாரியான மாவட்ட வருவாய் அலுவலர் கலால்துறை இணை ஆணையர் சுபா நந்தினியிடம் கிராம மக்கள் மனு அளித்தனர்.
இதைப்போல் கோதவாடி கிராமத்தில் கால்நடை மருத்துவமனை, சமுதாயக்கூடம், எல்லை விரிவாக்கம், பேருந்து வசதி போன்ற கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஊராட்சி மன்றத் தலைவர் ரத்தினசாமி மற்றும் துணைத் தலைவர் பரமசிவம் ஆகியோர் மனு அளித்தனர்.
இன்று 11 கிராமங்களுக்கு ஒரே நாளில் ஜமாபந்தி நடைபெறுவதால் தாலுகா அலுவலகத்தில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
இதனால் கிணத்துக்கடவு காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் உதவி ஆய்வாளர் கருப்பசாமி பாண்டியன் ஆகியோர் தலைமையில் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.