கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் கடந்த இரண்டு மாதங்களில் திருடப்பட்ட சுமார் ரூ.19.50 லட்சம் மதிப்பிலான 130 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அதனை உரிமையாளர்களிடம் மாவட்ட எஸ்.பி. பத்ரிநாராயணனிடம் இன்று வழங்கினார்.
கோவை: கோவை மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களில் திருடப்பட்ட சுமார் ரூ.19.50 லட்சம் மதிப்பிலான 130 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு உரிமையாளரிடம் மாவட்ட எஸ்.பி. பத்ரிநாராயணன் வழங்கினார்.

கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் கடந்த இரண்டு மாதங்களில் திருடப்பட்ட சுமார் ரூ.19.50 லட்சம் மதிப்பிலான 130 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அதனை உரிமையாளர்களிடம் மாவட்ட எஸ்.பி. பத்ரிநாராயணனிடம் இன்று வழங்கினார்.

இதையடுத்து, செய்தியாளரிடம் பேசிய எஸ்.பி கூறியதாவது: கோவை மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களில் நடந்த கொலை, ஆதாய கொலை, கொள்ளை, திருட்டு, நகை பறிப்பு, சிறார்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகள், போதைப் பொருட்கள் விற்பனை, மது விற்பனை, குண்டர் தடுப்பு சட்டம், சூதாட்டம், லாட்டரி விற்பனை மற்றும் செல்போன் திருட்டு போன்ற பல்வேறு குற்றச் சம்பவங்கள் தொடர்பாக 1378 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வழக்குகளில் தொடர்புடைய, 1516 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவை மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களில். 71 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் சம்மந்தப்பட்ட 97 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டும், அவர்களிடமிருந்து ரூ.17,12,830/- மதிப்புள்ள 172 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அதே போல், 169 குட்கா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதில் சம்மந்தப்பட்ட 178 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டும் அவர்களிடமிருந்து ரூ.20,55,006/ மதிப்புள்ள 2678 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் 1,192 மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதில் சம்மந்தப்பட்ட 1206 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டும் அவர்களிடமிருந்து 4900 லிட்டர் மதுபானங்கள் மற்றும் 24 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
திருட்டு வழக்குகளில் சம்மந்தப்பட்ட 37 திருட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டும், அவர்களிடமிருந்து ரூ.39.83 லட்சம் மதிப்புள்ள திருட்டு சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதே போல், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற குற்றங்கள் சம்மந்தமாக 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் சம்மந்தப்பட்ட 30 குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

மேலும், போக்சோ வழக்குகளில் சம்மந்தப்பட்ட 2 குற்றவாளிகளுக்கு தலா 20 மற்றும் ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை 18 பெற்றுதரப்பட்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. போக்சோ சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்குகளில் 103 வழக்குகளுக்கு இறுதி அறிக்கை தாக்கல் செய்தும், 18 வழக்ககுகள் நீதிமன்ற கோப்புக்கு எடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மற்றும் சட்டம் ஒழுங்கிற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த 5 குற்றவாளிகள் மற்றும் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த 1 குற்றவாளி என மொத்தம் 6 குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்ட காவல்துறை சார்பாக 6 சைபர் கிரைம் விழிப்புணர்வு மற்றும் 119 குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான விழிப்புணர்வு கூட்டங்களும் நடத்தப்பட்டுள்ளது", என எஸ்.பி. பத்ரிநாராயணன் தெரிவித்தார்.
கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் கடந்த இரண்டு மாதங்களில் திருடப்பட்ட சுமார் ரூ.19.50 லட்சம் மதிப்பிலான 130 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அதனை உரிமையாளர்களிடம் மாவட்ட எஸ்.பி. பத்ரிநாராயணனிடம் இன்று வழங்கினார்.
இதையடுத்து, செய்தியாளரிடம் பேசிய எஸ்.பி கூறியதாவது: கோவை மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களில் நடந்த கொலை, ஆதாய கொலை, கொள்ளை, திருட்டு, நகை பறிப்பு, சிறார்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகள், போதைப் பொருட்கள் விற்பனை, மது விற்பனை, குண்டர் தடுப்பு சட்டம், சூதாட்டம், லாட்டரி விற்பனை மற்றும் செல்போன் திருட்டு போன்ற பல்வேறு குற்றச் சம்பவங்கள் தொடர்பாக 1378 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வழக்குகளில் தொடர்புடைய, 1516 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவை மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களில். 71 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் சம்மந்தப்பட்ட 97 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டும், அவர்களிடமிருந்து ரூ.17,12,830/- மதிப்புள்ள 172 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அதே போல், 169 குட்கா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதில் சம்மந்தப்பட்ட 178 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டும் அவர்களிடமிருந்து ரூ.20,55,006/ மதிப்புள்ள 2678 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் 1,192 மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதில் சம்மந்தப்பட்ட 1206 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டும் அவர்களிடமிருந்து 4900 லிட்டர் மதுபானங்கள் மற்றும் 24 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
திருட்டு வழக்குகளில் சம்மந்தப்பட்ட 37 திருட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டும், அவர்களிடமிருந்து ரூ.39.83 லட்சம் மதிப்புள்ள திருட்டு சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதே போல், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற குற்றங்கள் சம்மந்தமாக 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் சம்மந்தப்பட்ட 30 குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
மேலும், போக்சோ வழக்குகளில் சம்மந்தப்பட்ட 2 குற்றவாளிகளுக்கு தலா 20 மற்றும் ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை 18 பெற்றுதரப்பட்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. போக்சோ சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்குகளில் 103 வழக்குகளுக்கு இறுதி அறிக்கை தாக்கல் செய்தும், 18 வழக்ககுகள் நீதிமன்ற கோப்புக்கு எடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மற்றும் சட்டம் ஒழுங்கிற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த 5 குற்றவாளிகள் மற்றும் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த 1 குற்றவாளி என மொத்தம் 6 குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்ட காவல்துறை சார்பாக 6 சைபர் கிரைம் விழிப்புணர்வு மற்றும் 119 குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான விழிப்புணர்வு கூட்டங்களும் நடத்தப்பட்டுள்ளது", என எஸ்.பி. பத்ரிநாராயணன் தெரிவித்தார்.