கோவை இளைஞர் கொலை வழக்கு: இருவர் தடுப்பு காவலில் அடைப்பு - மாநகர காவல் ஆணையாளர் உத்தரவு…!

இருவரையும் குண்டர் சட்டத்தின் உட்பிரிவான தடுப்புக் காவலில் வைக்க மாநகர காவல் ஆணையாளர் பிரதீப் குமார் உத்தரவிட்டார்.



கோவை: கோவை இளைஞர் கொலை வழக்கு தொடர்பாக இருவரை தடுப்புக் காவலில் அடைக்க மாநகர காவல் ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி கோவை கெம்பட்டி காலனியை சேர்ந்த சந்தோஷ் குமார் (34). என்பவரை உக்கடம் முத்துமாரியம்மன் கோயில் அருகே வைத்து, சுரேஷ்குமார் (26), முத்துப்பாண்டி (23) ஆகிய இருவரும் தனது நண்பர்கள் உதவியோடு வெட்டிக் கொலை செய்தனர்.

இந்த வழக்கில் இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சுரேஷ்குமார் மற்றும் முத்துப்பாண்டி மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால் கோவை மாநகர துணை ஆணையர் ஜெயச்சந்திரன் மற்றும் உக்கடம் சரக காவல் உதவி ஆணையாளர் பரிந்துரையின்படி சுரேஷ்குமார் மற்றும் முத்துப்பாண்டி ஆகிய இருவரையும் குண்டர் சட்டத்தின் உட்பிரிவான தடுப்புக் காவலில் வைக்க மாநகர காவல் ஆணையாளர் பிரதீப் குமார் உத்தரவிட்டார்.

இதற்கான உத்தரவு ஆணை கோவை மத்தியச் சிறையில் உள்ள இருவருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...