பொள்ளாச்சி உடுமலை சாலையில் சரக்கு வாகனம் மீது கார் மோதி விபத்து - மூதாட்டி உட்பட இருவர் பலி!

பொள்ளாச்சி உடுமலை சாலை ஊஞ்சவேலம்பட்டி அருகில் சாலையை கடக்க முயன்ற சரக்கு வாகனம் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் மூதாட்டி உட்பட 2 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: கோவை அருகே உள்ள குரும்பபாளையம் பகுதியை சேர்ந்த 5 பேர் உடுமலையில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு காரில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது பொள்ளாச்சியிலிருந்து உடுமலை சாலை ஊஞ்சவேலம்பட்டி அருகே சென்றபோது, சாலையை கடக்க முயன்ற சரக்கு வாகனம் மீது கார் மோதியது. அப்போது சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த 70 வயது மூதாட்டி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காரில் வந்த கோவையைச் சேர்ந்த கோதைநாயகம், மரகதவடிவு, மகாலட்சுமி, 7 வயது சிறுவன் மற்றும் காரை ஓட்டி வந்த கவியரசு ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.



அருகில் இருந்தவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் கோதைநாயகம் உயிரிழந்தார். படுகாயமடைந்த 4 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது தொடர்பாக, தொடர்பாக பொள்ளாச்சி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, உயிரிழந்த 70 வயது மூதாட்டி யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...