கோவையில் 1431 ம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீர்வாய முகாம் - சூலூரில் கருணை அடிப்படையில் கிராம உதவியாளர் பணி!

கோவையில் 1431 ம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீர்வாய முகாம் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் விரைவில் தீர்வு காண அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.


கோவை: கோவையில் 1431ம் ஆண்டுக்கான வருவாய் தீர்வாயம் முகாம் 11 வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற்றது.



அதன் ஒரு பகுதியாக சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த முகாமில் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.



மேலும் இம்முகாமில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த நில அளவை கருவிகளையும் பார்வையிட்டார். இந்த வருவாய் தீர்வாயம் 11 வட்டாட்சியர் அலுவலகங்களிலும் இன்று முதல் 1ஆம் தேதி வரை (விடுமுறை நாட்கள் திங்கட்கிழமை அல்லாமல்) நடைபெறுகிறது. முகாமினை வட்டங்கள் தோறும் சிறப்பாக நடத்த வருவாய் தீர்வாய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட ஆட்சியர் பெற்றுக் கொண்ட கோரிக்கை மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான மனுக்களுக்கு தீர்வு காண அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இதில் சூலூர் வட்டம் செஞ்சேரிபுதூர் கிராம உதவியாளராக பணிபுரிந்து பணி இடையில் காலமான ஆரான் என்பவரது மகள் ஜானகிக்கு கருணை அடிப்படையில் கிராம உதவியாளர் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...