கோவை சூலக்கல் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: பூச்சட்டி எடுத்து, அலகு குத்தி, தேர் இழுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்!

கோவை கிணத்துக்கடவு பகுதியில் உள்ள சூலக்கல் மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில் ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு பூச்சட்டி எடுத்து, அலகு குத்தி, தேர் வடம் பிடித்து இழுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.


கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே பிரசித்தி பெற்ற சூலக்கல் மாரியம்மன் கோவிலில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தேர் திருவிழா நடைபெறுகிறது.

இந்தாண்டுக்கான தேர்த் திருவிழா கடந்த 18ஆம் தேதி தொடங்கி நாள்தோறும் கிராம மக்கள் பூச்சட்டி எடுத்தும், அலகு குத்தியும் வழிபட்டு வந்தனர். மூன்று நாட்கள் நடக்கும் இந்த தேர் திருவிழாவின் முதல் நாளான இன்று 36 அடி உயரம் கொண்ட அலங்கரிக்கப்பட்ட தேரில் சிவப்பு பட்டு உடுத்தி அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தாள்.



இதையடுத்து தேர் வலம் இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த 15 நாட்களாக விரதமிருந்த பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்று தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். வீதிகளில் அசைந்தாடி வந்த தேர் மீது பக்தர்கள் வாழைப்பழம் வீசி பய பக்தியுடன் வழிபட்டனர். முதல் நாள் வலம் வந்த தேர் கிராமத்தில் கிழக்கு எல்லைப் பகுதியில் நிலை நிறுத்தப்பட்டது.

இதையடுத்து, மீண்டும் நாளை மற்றும் நாளை மறுநாள் தேர் திருவீதி உலா வருவது குறிப்பிடத்தக்கது.



இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த தேர் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...