கோவை விளாங்குறிச்சி சாலையில் உள்ள குமுதம் நகர் நலக்குழு அமைப்பினர் சார்பில் அப்பகுதியில் வர உள்ள டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
கோவை: டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
கோவை விளாங்குறிச்சி சாலையில் உள்ள குமுதம் நகர் நலக்குழு அமைப்பினர் சார்பில் அப்பகுதியில் வர உள்ள டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
இது குறித்து அவர்கள் அளித்த மனுவில் விளாங்குறிச்சி சாலை, குமுதம் நகர், பால்கார தோட்டம் அருகில் புதிய டாஸ்மாக் கடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், அப்பகுதியில் வங்கிகள், உணவு கடைகள், சிறு குறு நிறுவனங்கள், பேருந்து நிறுத்தம் போன்றவை இயங்கி வருவதாலும், இப்பகுதியில் டாஸ்மாக் கடை அமைய பெற்றால் பொதுமக்களுக்கும், பள்ளி கல்லூரி மாணவர்களுக்கும், கடைகள் மற்றும் சிறு நிறுவனங்களுக்கு பெரும் இடையூறு ஏற்படும் சூழல் நிலவும் என்பதால் மாவட்ட நிர்வாகம் டாஸ்மாக் கடையை அவ்விடத்தில் திறக்க அனுமதிக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளனர்.