'மக்களின் குறை தீர்க்கும் ஜமாபந்தி' - கோவையில் பொள்ளாச்சி தாலுகா அலுவலகத்தில் கிராம மக்கள் மனு..!

பல்வேறு கோரிக்கை தொடர்பாகவும், நலத்திட்ட உதவிகள் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து 63 மனுக்கள் பெறப்பட்டதாகவும், அதில் 22 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டதாகவும் வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


கோவை: பொள்ளாச்சி தாலுகா அலுவலகத்தில் இன்று ஜமாபந்தி துவங்கியது. ராமபட்டினம் உள்வட்டத்தில் 63 மனுக்கள் பெறப்பட்டு, 22 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.

கோவை தெற்கு வட்டம் மற்றும் வடக்கு வட்டத்திற்கான 1431ம் பசலி ஆண்டிற்குரிய ஜமாபந்தி அந்தந்த தாலுகா அலுவலகத்தில் நடத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இதில் பொள்ளாச்சி தாலுகாவில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களின் குறைகளைத் தீர்க்கும் வகையில் ஜமாபந்தி நிகழ்ச்சி இன்று தாலுகா அலுவலகத்தில் தொடங்கியது.



முதல் நாள் ஜமாபந்தியில் ராமபட்டிணம் உள்ள வட்டத்திற்குட்பட்ட கிராம மக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டது.

நாளை 27ம் தேதி பொள்ளாச்சி வடக்கு உள்வட்டம், 31ம் தேதி பொள்ளாச்சி தெற்கு உள்வட்டம், ஜூன் 1ம் தேதி பெரிய நெகமம் உள்வட்டம், 2ம் தேதி கோலார்பட்டி உள்வட்டங்களுக்கு ஜமாபந்தி நடக்க உள்ளது.

இன்று, ஜமாபந்தியின் போது வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், முதியோர் உதவித் தொகை, சாதி சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை தொடர்பாகவும், நலத்திட்ட உதவிகள் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து 63 மனுக்கள் பெறப்பட்டதாகவும், அதில் 22 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டதாகவும் வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...