கோவை பூண்டி வெள்ளியங்கிரி மலையேற்றத்திற்கு வந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் உயிரிழப்பு.

6 ஆவது மலையில் வந்த போது, தனக்கு உடல் நலம் சரியில்லை என தனது நண்பரிடம் கூறிய இளஞ்செழியன் மெதுவாக மலை இறங்கி வந்துள்ளார். பின்னர், 5 ஆவது மலை அருகே வந்த போது அவர் மயங்கி விழுந்து இறந்ததாக தெரிகிறது.


கோவை: கோவை பூண்டி வெள்ளியங்கிரி மலையேற்றத்திற்கு வந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் 5 ஆவது மலையில் இறங்கிக் கொண்டிருந்த போது மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்தவர் இளஞ்செழியன் (55). இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன், தனது நண்பர் ராமமூர்த்தி என்பவருடன் சென்னையில் இருந்து கோவை வந்துள்ளார். பின்னர், செவ்வாய்க்கிழமை இரவு கோவை பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசிக்க இரவு மலை ஏறி, 7 ஆவது மலையில் உள்ள சுயம்புலிங்க ஆண்டவரை தரிசனம் செய்து விட்டு, மீண்டும் காலை 9 மணிக்கு கீழே இறங்கியதாக தெரிகிறது.

அப்போது 6 ஆவது மலையில் வந்த போது, தனக்கு உடல் நலம் சரியில்லை என தனது நண்பரிடம் கூறிய இளஞ்செழியன் மெதுவாக மலை இறங்கி வந்துள்ளார். பின்னர், மாலை 5 ஆவது மலை அருகே வந்த போது அவர் மயங்கி விழுந்ததாக தெரிகிறது. இதையடுத்து, அங்கு மலையேற்றத்திற்காக வந்த மருத்துவர் ஒருவர் அவரை சோதனை செய்த போது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து அங்கிருந்தவர்கள் ஆலாந்துறை போலீஸ் மற்றும் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, இளஞ்செழியன் உடல் அடிவாரத்திற்கு கொண்டுவரப்பட்டு, பிரேத பரிசோதனைகாக, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், சம்பவம் தொடர்பாக ஆலாந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...