வாளையாறு அருகில் லாட்டரி விற்க வந்த கேரளாவைச் சேர்ந்தவர்கள் கைது - ரூ.1.32 லட்சம் மதிப்பிலான லாட்டரி டிக்கெட்டுகள் பறிமுதல்!

கோவை வாளையாறு அருகே லாட்டரி விற்க வந்த கேரளாவைச் சேர்ந்தவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த ரூ.1.32 லட்சம் மதிப்பிலான லாட்டரி டிக்கெட்டுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.


கோவை: கேரளாவில் இருந்து கோவை வழியாக அவிநாசி, திருப்பூர் மாவட்டங்களுக்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரிகளை விற்பனைக்கு எடுத்துச் செல்வதாக க.க.சாவடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து க.க.சாவடி போலீஸ் உதவி ஆய்வாளர் சரவணன் தலைமையில் போலீசார் பாலக்காடு - சேலம் நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.



அப்போது அங்குள்ள சர்வீஸ் சாலையில் வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது அதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து லாட்டரிகளை எடுத்து வந்த கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த தியாகராஜன் (38), கனகராஜ் (35) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ.1.32 லட்சம் மதிப்பிலான 3,300 லாட்டரிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர்கள் இருவரையும் நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...