கோவை வாளையாறு அருகே லாட்டரி விற்க வந்த கேரளாவைச் சேர்ந்தவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த ரூ.1.32 லட்சம் மதிப்பிலான லாட்டரி டிக்கெட்டுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
கோவை: கேரளாவில் இருந்து கோவை வழியாக அவிநாசி, திருப்பூர் மாவட்டங்களுக்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரிகளை விற்பனைக்கு எடுத்துச் செல்வதாக க.க.சாவடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து க.க.சாவடி போலீஸ் உதவி ஆய்வாளர் சரவணன் தலைமையில் போலீசார் பாலக்காடு - சேலம் நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்குள்ள சர்வீஸ் சாலையில் வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது அதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து லாட்டரிகளை எடுத்து வந்த கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த தியாகராஜன் (38), கனகராஜ் (35) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ.1.32 லட்சம் மதிப்பிலான 3,300 லாட்டரிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர்கள் இருவரையும் நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து க.க.சாவடி போலீஸ் உதவி ஆய்வாளர் சரவணன் தலைமையில் போலீசார் பாலக்காடு - சேலம் நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்குள்ள சர்வீஸ் சாலையில் வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது அதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து லாட்டரிகளை எடுத்து வந்த கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த தியாகராஜன் (38), கனகராஜ் (35) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ.1.32 லட்சம் மதிப்பிலான 3,300 லாட்டரிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர்கள் இருவரையும் நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.