'பிளாஸ்டிக் இல்லா வால்பாறையாக' மாற்ற வனத்துறை திட்டம்!

வால்பாறையை பிளாஸ்டிக் இல்லா பகுதியாக மாற்றும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக இறங்கியுள்ளனர். அதன் ஒரு பகுதியாக வால்பாறைக்கு வரும் வாகனங்களை சோதனை செய்து பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்படுவதோடு, துணிப்பைகளும் வழங்கப்பட்டு வருகிறது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை, மலைப் பகுதியானது. இது ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதியாக உள்ளது.

இங்கு பச்சை பசேல் என்று தேயிலை தோட்டங்கள் அதிகளவில் காணப்படுகின்றன. நல்ல காற்றோட்டமும், இயற்கை எழில் மிகுந்த பகுதியாக வால்பாறை விளங்குகிறது. இங்கு யானை, புலி, சிறுத்தை, மான், சிங்கவால் குரங்கு, இருவாட்சி பறவைகள், குரங்குகள் ஆகியவை வாழ்ந்து வருகிறது. இவற்றை அனுபவிக்க பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

இங்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பிளாஸ்டிக் பொருட்களை வனப்பகுதியில் போட்டு செல்வதால் அதை வனவிலங்குகள் உணவு என்று உண்டு இறந்து போக நேரிடுகிறது. வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி செல்லும் கொண்டை ஊசி வளைவு பகுதியில் அதிகப்படியான குரங்குகள் வாழ்ந்து வருகிறது. சுற்றுலா பயணிகள் செல்லும் போது பிளாஸ்டிக் பொருட்களை வீசி செல்வதால் அதை எடுத்து உண்ணும் குரங்குகள் பரிதாபமாக இறக்க நேரிடுகிறது.



இதை தடை செய்ய வால்பாறை வனத்துறையினர் வால்பாறைக்கு வரும் வழியான ஆழியார் பகுதி சோதனை சாவடி பகுதி, கேரளாவில் இருந்து வால்பாறைக்கு வரக்கூடிய மலுக்குப்பாறை சோதனை சாவடி பகுதியில் வனத்துறையினர் தீவிரமாக வாகன சோதனை செய்து பிளாஸ்டிக் பொருட்களை வைத்து இருந்தால் அதை எடுத்து குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு அவர்களுக்கு மஞ்சப்பை, துணிப்பைகள் கொடுத்து வருகின்றனர். பிளாஸ்டிக் இல்லா வால்பாறையாக மாற்ற வனத்துறையினர் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். பொதுமக்கள் அதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று வனத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.



இன்று மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் மணிகண்டன் தலைமையில், மலுக்குப்பாறை சோதனை சாவடி பகுதியில் கேரளாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரக்கூடிய வாகனங்களை பரிசோதனை செய்த வனத்துறை அதிகாரிகள் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து அவர்களுக்கு துணிப்பைகளை வழங்கினர்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...