கோவை மாநகராட்சியில் ரூ.184 கோடி ரூபாய் மாற்றி செலவு செய்யப்பட்டுள்ளது - சட்டபேரவை மதிப்பீட்டு குழு தகவல்….!

கோவையில் பெறப்பட்ட கோரிக்கைகள் மற்றும் பிரச்சனைகள் அனைத்தும் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கோவையில் கட்டப்பட்டு வரும் பாலங்கள் விரைவில் கட்டி முடிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.



கோவை: கோவை மாநகராட்சியில் முந்தைய காலகட்டங்களில் பல்வேறு காரணங்களுக்காக ரூ.184 கோடி ரூபாய் மாற்றி செலவு செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளதாக, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக் குழுவின் தலைவர் டி.ஆர்.பி ராஜா தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் கடந்த 2 தினங்களாக தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டுக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மதிப்பீட்டுக் குழுவின் தலைவர், டி.ஆர்.பி ராஜா தலைமையில் நேற்று ஆர்.எஸ் புரம் உழவர் சந்தையில் தங்களது ஆய்வை துவக்கிய மதிப்பீட்டு குழுவினர் பல்வேறு பகுதிகளில் ஆய்வுகளை மேற்கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, கோவை கொடிசியா வளாகத்தில் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற குழுவினர் கோவை மாவட்டத்தில் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தும், நிலுவையில் உள்ள பணிகள் குறித்தும், நிதி ஒதுக்கப்படும் தொடங்கப்படாமல் உள்ள பணிகள் குறித்தும் கேட்டறிந்தனர்.



இந்த ஆய்வுக்கூட்டத்தில், மாநகராட்சி, நகராட்சி, ஊரக பகுதிகளில் மேற்கொள்ளபட்ட பணிகள் குறித்து தனித்தனியாக கேட்டறிந்த டி.ஆர்.பி ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், மக்களின் வரிப்பணம் சரியான முறையில் செலவு செய்யப்பட்டு இருக்கிறதா? நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் என்னென்ன? என்பது குறித்து கேட்டு இருந்ததாகவும், இரண்டு நாட்களாக பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டது குறித்து 7 மணிநேரம் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், கடந்த இரண்டு நாட்களாக பதிவான கருத்துக்களை சட்டமன்றத்தில் பதிவாகும் வரை வெளிப்படையாக கூற முடியாது எனக்கூறிய அவர், கோவை மாவட்டத்தை பொறுத்தவரை பேருந்து வசதி குறித்த கோரிக்கைகள் தான் அதிகமாக வந்துள்ளதாகவும், வனத்துறையில் வழங்கபட வேண்டிய அனுமதிகள் குறித்த பிரச்சனைகள், மாசுகட்டுப்பாட்டு வாரியம் சார்ந்த புகார்கள், குறிப்பாக நொய்யலாற்றில் நிலவிவரும் மாசு தொடர்பான பிரச்சனைகள்,குடிநீர் பிரச்சனை தொடர்பாக விவரங்கள் பெறப்பட்டுள்ளதாக, தெரிவித்தார்.

கோவை மாவட்டத்தில் குடிநீர் மிகவும் குறைவாக கிடைப்பதால், அதை சரி செய்யக்கூடிய நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாகவும் தெரிவித்தார். தென்னை விவசாயிகளின் பிரச்னைகளில் ஒன்றான கொப்பரைத் தேங்காய் விலை வீழ்ச்சி குறித்து பேசி இருப்பதாக கூறியவர், இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் விரிவான அறிக்கை வெளியிடுவார் எனவும் தெரிவித்தார்.



மேலும், பெறப்பட்ட கோரிக்கைகள் மற்றும் பிரச்சனைகள் அனைத்தும் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எனக் கூறிய அவர், கோவையில் கட்டப்பட்டு வரும் பாலங்களை ஆய்வு செய்ததில், பெரியநாயக்கன்பாளையம் பாலத்தை ஒன்பது மாதங்களில் கட்டி முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், ஜி.என்.மில்ஸ் பாலம் நான்கு மாதங்களில் கட்டி முடிக்கபடும் எனவும் தெரிவித்தார்.

மேலும், தன்னிடம் தொழில்துறையினர் கோவையில் இருந்து நாகப்பட்டினம் வரை உற்பத்திப் பொருட்களை கொண்டு செல்வதற்கு வழித்தடம் ஒன்றை அமைத்து தருமாறு கேட்டுக் கொண்டதாக தெரிவித்தார். முந்தைய காலகட்டங்களில் பல்வேறு காரணங்களுக்காக கோவை மாநகராட்சியில் ரூ.184 கோடி ரூபாய் மாற்றி செலவு செய்யப்பட்டிருக்கிறது தெரியவந்ததுள்ளதாகவும், எந்த நோக்கத்துக்காக பணம் ஒதுக்கப்பட்டதோ, அதற்காக இல்லாமல் வேறு பணிகளுக்கு செலவிடப்பட்டு உள்ளது. அதற்கான காரணங்களையும் கோவை மாநகராட்சி கூறியிருக்கிறது எனவும் இது தொடர்பாக தமிழக அரசிடம் தெரிவிக்கப்படும், என சட்டபேரவை மதிப்பீட்டு குழு தலைவர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்தார்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...