கஞ்சா விற்பனை செய்த நபரை கைது செய்த போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை: வால்பாறையில் 3-கிலோ 500-கிராம் கஞ்சா விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை, கஞ்சா விற்பனை போன்றவர்களை தடுக்க வால்பாறை காவல்துறையினர் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், வால்பாறை காமராஜர் நகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக வால்பாறை காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. காமராஜ் நகர் பகுதியில் சந்தேகப்படும் வண்ணம் சாலை ஓரம் நின்று இருந்த நபரை விசாரணை செய்தனர். இதில் பையில் கஞ்சா இருந்து.
இதையடுத்து, அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர். அதில் 3 கிலோ 500 கிராம் கஞ்சா இருந்தது. இதையடுத்து காவல் ஆய்வாளர் கற்பகம் தலைமையில், கஞ்சா விற்பனை செய்த தாஸ் என்ற மரியதாஸ் என்பவரை கைது செய்து வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும், கஞ்சா விற்பனை செய்யக்கூடிய நபர்களை பிடித்து கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை, கஞ்சா விற்பனை போன்றவர்களை தடுக்க வால்பாறை காவல்துறையினர் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், வால்பாறை காமராஜர் நகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக வால்பாறை காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. காமராஜ் நகர் பகுதியில் சந்தேகப்படும் வண்ணம் சாலை ஓரம் நின்று இருந்த நபரை விசாரணை செய்தனர். இதில் பையில் கஞ்சா இருந்து.
இதையடுத்து, அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர். அதில் 3 கிலோ 500 கிராம் கஞ்சா இருந்தது. இதையடுத்து காவல் ஆய்வாளர் கற்பகம் தலைமையில், கஞ்சா விற்பனை செய்த தாஸ் என்ற மரியதாஸ் என்பவரை கைது செய்து வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும், கஞ்சா விற்பனை செய்யக்கூடிய நபர்களை பிடித்து கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.