புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் செயினை பறித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
கோவை: கோவையில் சாலையில் சென்ற பெண்ணிடம் செயின் பறித்து சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை கணபதி அடுத்த மணிகாரம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜகோபால். இவருடைய மனைவி சாவித்திரி(55) இவருடைய கணவர் இறந்த நிலையில், சாவித்திரி அருகே உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார்.
நேற்று வழக்கம் போல் வேலைக்கு சென்ற சாவித்திரி இரவு 8-மணி அளவில் மணிகாரம்பாளையம் தனியார் பள்ளி அருகில் சாலையில் நடந்து வந்துள்ளார்.
அப்போது, இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத இரண்டு மர்ம நபர்கள், சாவித்திரி கழுத்தில் அணிந்திருந்த 3-சவரன் செயினை பறித்துக் கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பி சென்றனர்.
இதனைத் தொடர்ந்து, சாவித்திரி சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார். புகார் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் செயினை பறித்துச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
கோவை கணபதி அடுத்த மணிகாரம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜகோபால். இவருடைய மனைவி சாவித்திரி(55) இவருடைய கணவர் இறந்த நிலையில், சாவித்திரி அருகே உள்ள பிளாஸ்டிக் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார்.
நேற்று வழக்கம் போல் வேலைக்கு சென்ற சாவித்திரி இரவு 8-மணி அளவில் மணிகாரம்பாளையம் தனியார் பள்ளி அருகில் சாலையில் நடந்து வந்துள்ளார்.
அப்போது, இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத இரண்டு மர்ம நபர்கள், சாவித்திரி கழுத்தில் அணிந்திருந்த 3-சவரன் செயினை பறித்துக் கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பி சென்றனர்.
இதனைத் தொடர்ந்து, சாவித்திரி சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார். புகார் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் செயினை பறித்துச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.