நூல் விலை உயர்வு: மத்திய அரசை கண்டித்து திருப்பூரில் ரயில் மறியல் போராட்டம் நடத்த உள்ளதாக SDPI-கட்சி அறிவிப்பு..!

நூல் விலையை கட்டுப்படுத்தி, சட்டவிரோதப் பஞ்சு பதுக்கலை தடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 30-ம் தேதி திருப்பூரில் ரயில் மறியல் போராட்டம் நடத்த உள்ளதாக எஸ்டிபிஐ கட்சி அறிவித்துள்ளது.


திருப்பூர்: திருப்பூரில் தொடர்ந்து அதிகரித்து வரும் நூல் விலையேற்றத்தை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசைக் கண்டித்தும், உடனடியாக நூல் விலையை கட்டுப்படுத்தி, சட்டவிரோதப் பஞ்சு பதுக்கலை தடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 30-ம் தேதி திருப்பூரில் ரயில் மறியல் போராட்டம் நடத்த உள்ளதாக எஸ்டிபிஐ கட்சி அறிவித்துள்ளது.



எஸ்டிபிஐ கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் பஷீர் அகமது இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது, ஒன்றிய பா.ஜ.க அரசின் தவறான பொருளாதார கொள்கையினால் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை, அத்தியாவசிய பொருட்கள் விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளது.

திருப்பூரில் தொடர் நூல் விலை ஏற்றம், வரைமுறையற்ற நூல் ஏற்றுமதி, சட்டவிரோத பஞ்சு பதுக்கல், காரணமாக திருப்பூரில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களின் வாழ்வாதாரமான பனியன் தொழில் பெரும் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

அதற்குக் காரணமான ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து வரும் 30-ம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், திருப்பூரின் அண்டை மாவட்டங்களான ஈரோடு, கோவை, கரூர், சேலம் ஆகிய கொங்கு மண்டலங்களில் அனைத்து தொழிற் துறையினரையும் ஒருங்கிணைத்து நூல் விலையை குறைக்க SDPI கட்சியின் சார்பாக பெரும் தொடர் போராட்டங்களை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...