ஆழியாறு அணையில் இருந்து ஒட்டன்சத்திரத்தில் தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை அரசு கைவிட விட்டால் பிஏபி விவசாயிகள் சார்பில் மாபெரும் பேரணி நடத்தப்படும் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள கரியான் செட்டிபாளையம் பகுதியில் ஆழியாறு அணை புதிய ஆயக்கட்டு பாசன விவசாயிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
புதிய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் சங்க செயலாளர் செந்தில் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தலைவர் அசோக் குமார் பொருளாளர் கன்னிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்தக் கூட்டத்தில் புதிய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆழியாறு அணையில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதிக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி பொள்ளாச்சி சார் ஆட்சியர், கோவை மாவட்ட ஆட்சியர், நீர்வளத்துறை செயலாளர் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் ஆகியோருடன் மனு அளித்து இருப்பதால் விரைந்து இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் இந்தத் திட்டத்தை கைவிடாவிட்டால் பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டம் விவசாயிகள் ஒன்று திரண்டு மாபெரும் பேரணி நடத்த இந்தக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
புதிய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் சங்க செயலாளர் செந்தில் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தலைவர் அசோக் குமார் பொருளாளர் கன்னிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்தக் கூட்டத்தில் புதிய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆழியாறு அணையில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதிக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி பொள்ளாச்சி சார் ஆட்சியர், கோவை மாவட்ட ஆட்சியர், நீர்வளத்துறை செயலாளர் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் ஆகியோருடன் மனு அளித்து இருப்பதால் விரைந்து இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் இந்தத் திட்டத்தை கைவிடாவிட்டால் பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டம் விவசாயிகள் ஒன்று திரண்டு மாபெரும் பேரணி நடத்த இந்தக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.