கோவையில் நீதிமன்ற கோப்புகளை மறைத்து வைத்த நீதிமன்ற உதவியாளர் கைது…!

சமந்தப்பட்ட கோப்புகளை தேடிய போது அவை கிடைக்காத நிலையில், அங்கு பொருத்தப்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது, மனோஜ்குமார் அந்த ஆவணங்களை எடுத்து மறைத்து வைத்தது தெரியவந்தது.


கோவை: கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ளEC கோர்ட், இன்றியமையா பண்டங்கள் சிறப்பு நீதிமன்றத்தில்உதவியாளராக பணியாற்றி வருபவர் மனோஜ்குமார்.

கடந்த சில வாரங்களாக முறையான தகவல் அளிக்காமல் விடுமுறை எடுத்து வந்ததால், அவரை நீதிபதி 10 நாட்கள் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டடார். இதனால், ஆத்திரமடைந்த மனோஜ்குமார் ஈரோடு மற்றும் கோவை வழக்கு தொடர்பாக மூன்று கோப்புகளை எடுத்து அதை மறைத்து வைத்துச் சென்றுள்ளார்.

இந்நிலையில், நீதிமன்றத்தில் பணியில் உள்ளவர்கள் அந்த கோப்புகளை தேடிய போது ஆவணங்கள் கிடைக்காத நிலையில் அங்கு பொருத்தப்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது, மனோஜ்குமார் அந்தஆவணங்களை எடுத்து மறைத்து வைத்ததுதெரியவந்தது.

இதையடுத்து, நீதிமன்ற பணியாளர் ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில்,மனோஜ்குமாரை பிடித்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். பின்னர், அவர் மீது ஒழுங்கீனமாக நடந்து கொள்ளுதல் உள்ளிட்ட பிரிவுகளின் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...