சமந்தப்பட்ட கோப்புகளை தேடிய போது அவை கிடைக்காத நிலையில், அங்கு பொருத்தப்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது, மனோஜ்குமார் அந்த ஆவணங்களை எடுத்து மறைத்து வைத்தது தெரியவந்தது.
கோவை: கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ளEC கோர்ட், இன்றியமையா பண்டங்கள் சிறப்பு நீதிமன்றத்தில்உதவியாளராக பணியாற்றி வருபவர் மனோஜ்குமார்.
கடந்த சில வாரங்களாக முறையான தகவல் அளிக்காமல் விடுமுறை எடுத்து வந்ததால், அவரை நீதிபதி 10 நாட்கள் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டடார். இதனால், ஆத்திரமடைந்த மனோஜ்குமார் ஈரோடு மற்றும் கோவை வழக்கு தொடர்பாக மூன்று கோப்புகளை எடுத்து அதை மறைத்து வைத்துச் சென்றுள்ளார்.
இந்நிலையில், நீதிமன்றத்தில் பணியில் உள்ளவர்கள் அந்த கோப்புகளை தேடிய போது ஆவணங்கள் கிடைக்காத நிலையில் அங்கு பொருத்தப்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது, மனோஜ்குமார் அந்தஆவணங்களை எடுத்து மறைத்து வைத்ததுதெரியவந்தது.
இதையடுத்து, நீதிமன்ற பணியாளர் ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில்,மனோஜ்குமாரை பிடித்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். பின்னர், அவர் மீது ஒழுங்கீனமாக நடந்து கொள்ளுதல் உள்ளிட்ட பிரிவுகளின் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
கடந்த சில வாரங்களாக முறையான தகவல் அளிக்காமல் விடுமுறை எடுத்து வந்ததால், அவரை நீதிபதி 10 நாட்கள் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டடார். இதனால், ஆத்திரமடைந்த மனோஜ்குமார் ஈரோடு மற்றும் கோவை வழக்கு தொடர்பாக மூன்று கோப்புகளை எடுத்து அதை மறைத்து வைத்துச் சென்றுள்ளார்.
இந்நிலையில், நீதிமன்றத்தில் பணியில் உள்ளவர்கள் அந்த கோப்புகளை தேடிய போது ஆவணங்கள் கிடைக்காத நிலையில் அங்கு பொருத்தப்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது, மனோஜ்குமார் அந்தஆவணங்களை எடுத்து மறைத்து வைத்ததுதெரியவந்தது.
இதையடுத்து, நீதிமன்ற பணியாளர் ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில்,மனோஜ்குமாரை பிடித்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். பின்னர், அவர் மீது ஒழுங்கீனமாக நடந்து கொள்ளுதல் உள்ளிட்ட பிரிவுகளின் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.